மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-11
மோகனம்-11
அந்தப் புலர்காலைப் பொழுதினில்.. கீழ்வானில் ஆதவனும் இலேசாகத் தலைநீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க.. இருளைக் கிழித்துக் கொண்டு சிவந்திருந்தது வானம்!!
ஒருபுறத்தில் சென்னையின் மெரினா கடற்கரையோ… விடியல் பொழுதிலும் கூட… பகற்போல பப்பரப்பாய்.. பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கையில்… காக்கைக் கூட்டங்கள் பறந்து கொண்டிருந்தன அங்குமிங்குமாய்.
தூரத்தோ ஒன்றையொன்றைத் துரத்தி வரும் வெண்ணிற அலைகளின் மீது பார்வையை.. மிருதுவாகப் பதித்த வண்ணமே…
நடைபாதைக் கரையில்… ஹெட்செட்டில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே மெல்லோட்டம் ஓடிக் கொண்டிருந்தாள் நம் நாயகி மதுராக்ஷி!!
எது கால்கள் சுயாதீனமாக மெல்லோட்டம் ஓடுகின்றது என்றால்?? அவளது கை, கால் காயங்கள்??
அது ஒரு நாள் ஓய்வுக்குப் பின் நன்கு குணமாகியிருக்க… இரு நாட்களின் பின்.. தன்னுடைய முரட்டுத் தந்தையுடன்… ஜாகிங் தான் வந்திருக்கலானாள் அவள்.
இதமான கடல்க்காற்று.. அவளது தளர்வான ஜாகிங் ஆடைக்குள் ஊடுறுவி.. அவளைத் தழுவிச் செல்ல.. மிக நீண்ட நேரம் ஓடியதால் விழைந்த வியர்வையும் கூட.. குளுகுளுவென்ற காற்றுக்கு… இதமாய் காயும் போலத் தானிருந்தது.
ஹெட்செட்டின் மூலம் காதுக்குள் ஒலித்திருந்த பாடலின் வரிகளை ஆழ்ந்து இரசித்துக் கொண்டிருந்த மதுராக்ஷிக்கு… தந்தை.. அவளை நோக்கி… ஏதோ வாயசைத்துக் கூறுவது போலிருக்கவே…
பட்டென்று தன் காதுகளை விட்டும் ஹெட்செட்டைக் கழற்றிக் கொண்டே… தந்தையைப் பார்த்து, “என்னப்பா..புரியல..பெக் யுவர் பார்டன்.”என்று கேட்கலானாள்.
நில்லாமல் அவளுடன் இணைந்து ஓடிக் கொண்டிருந்தவரோ, மகளின் கவனயீனம் கண்டு மென்முறுவல் பூத்தவராக, “ஆமா.. ஜிம்மி.. எங்கே?? மூணு நாளா காணோம்..?? எல்லா இடமும் தேடிப் பார்த்தாச்சு… அக்கம்பக்கத்திலும் விசாரிச்சுப் பார்த்தாச்சு… ஒரு இடத்துலயும் காணோம்… யாரும் பார்த்ததாகவும் தகவல் இல்ல… பேசாமல் போலீஸ்ல கம்ப்ளேன் பண்ணிடலாமானு தோணுது மது…”என்று கூறியது மாத்திரம் தான் தாமதம்..
ஏதோ அதனையெல்லாம் நாசூக்காகக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு.. தந்தை ‘போலீஸ்’ என்ற ஒற்றைப் பதத்தை இழுத்ததும்.. அவளோட்டம் திடீரென்று தடைப்பட்டு நின்றது.
‘எங்கேயடா இன்னும் தந்தை ஜிம்மியைப் பற்றிக் கேட்கவில்லை?? அவளிடம் மட்டும் தந்தை ஜிம்மி பற்றி கேட்டு விடக்கூடாது’ என்று… பதறிப் பதறி…
கைகால் முறிவுக்கு ஓய்வெடுக்கிறேன் பேர்வழி என்று ஒழிந்து கொண்டிருந்தவளாயிற்றே அவள்??
எதை தந்தை தன்னிடம் கேட்டு விடக்கூடாதென்று எண்ணிக் கொண்டாளோ..?? அதைத் தந்தை தன்னிடம் கேட்டதும். அவளுக்கு குப்பென்று வியர்த்தது!!
அதில் வேறு இவர் போலீஸூக்கு வேறு போவது நல்லது என்று அவளிடமே கூற… சுகம் பெற்ற கை, கால்களும் தான் அவளுக்கு உதறல் எடுத்தது.
போலீஸூக்குப் போனால் விபரீத விளைவைச் சந்திக்க வேண்டி வருமே..??
காரணம். ஜிம்மியைக் கண்டுபிடிப்பதற்காக.. நிச்சயம் போலீஸ் விசாரணை மேற்கொள்ளும். அச்சமயம் தொடர் விசாரணைகளின் பின்னர்… ஜிம்மி அவன் வீட்டிலிருப்பது காவலதிகாரிகளுக்கு சர்வநிச்சயமாய் தெரிய வரும்.
அவனோ, ‘அது என் நாயல்ல.. என் வீட்டுக்கு.. கார் திருட வந்த “திருடி” விட்டுச்சென்ற நாய்’ என்று தானே சொல்லக்கூடும்!!
இறுதியில் … விசாரித்துப் பார்க்கும் போது…அவனது பக்கத்து வீட்டுக்குப் பிறந்தநாள்க் கொண்டாட வந்த… நம் நாயகியின் வேலை தான் இந்த திருட்டு வேலை அத்தனையுமென்று… உலகமே பொய்யாக முடிவுக்கட்டிக் கொள்ளும் இல்லையா??
பல தொலைக்காட்சி சேனல்களின் கேமராக்களின் ப்ளாஷ்லைட்கள்.. அவளைச் சூழ பளீச் பளீச்சென்று மின்ன…. மேலதிக விசாரணைகளுக்காக… அவளது வீடு தேடி வரும் காவல்துறையினர்.. ஜாகிங் உடையிலேயே… அவள் கையில் விலங்கு பூட்டி… அவளை தரதரவென இழுத்தல்லவா செல்லும்???
அதே சமயம் மறுநாள் காலை எல்லா மொழிப் பத்திரிகையிலும்.. முதல் பக்கத்திலேயே கொட்டையெழுத்தில்,
“கார் திருட வந்த விசித்திரப் பெண்..!!
நாயை விட்டுச் சென்றதால் போலீசார் சுற்றிவளைப்பு!!” என்று எதுகை மோனையில் கலந்து அடித்தல்லவா விடும்??
அவள் கைவிலங்குப் பூட்டி.. காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்படும்… புகைப்படம்…அவளது மனக்கண்ணுக்குள் மின்னல் வேகத்தில் வந்து போக…
வெட்டவெளிச்சத்தில்.. ஏதோ கனவு கண்டு கலைந்தாற் போலத் தான் திடுக்கிட்டு சிந்தனை கலைந்து நடப்புலகுக்கு வந்தாள் மதுராக்ஷி!!
“ஓ.. நோ!!!” என்று இரைந்து கத்தியவாறு.. சிந்தனை கலைந்து திரும்பிய போது… அவளது தந்தையோ… இவளின் மெல்லோட்டம் தடைப்பட்டு நின்றது கூட அறியாமல்… அவளுக்கு முன்னே.. சற்று தூரத்தில் ஓடிக் கொண்டிருப்பது புரிந்து மதுராக்ஷிக்கு.
தந்தை போலீஸூக்கு போவதற்கு முன்.. முதல் அவரது எண்ணத்தையே மாற்ற வேண்டும் என்று உள்ளுக்குள் கங்கணம் கட்டிக் கொண்டு… மூச்சிறைக்க இறைக்க .. அவர் பின்னாலேயே தொடர்ந்து ஓடினாள் அவள்.
அவருடன் ஒருவாறு சேர்ந்து கொண்டவளோ, தந்தையோடு தொடர்ந்து ஓடியவளாக, திக்கித் திணறிய பதற்றம் நிறைந்த குரலில்,
“ஏன்ப்பா.. இந்த.. சி.. சி.. சின்ன விஷயத்துக்கெல்லாம்.. போலீஸ் போகணுமா?? போலீஸ்க்கு இதை விட நிறைய கேஸ் கண்டுபிடிக்க இருக்குப்பா??இப்போ.. என்ன?? .. நம்ம ஜிம்மி எங்கே இருக்கும்னு தெரியணும் அவ்ளோ தானே?? நான் தான் உங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.. ஜிம்மி எங்கேயும் தொலைஞ்சி போகல.. அது பத்திரமா.. நம்ம… நிரோ வீட்ல தானிருக்கு”என்றவளோ… உள்ளுக்குள் விழித்துக் கொண்டிருந்தாள் திருட்டு விழி.
இது அறியாத வெள்ளந்தி தந்தையோ… பட்டென்று மெல்லோட்டத்தை நிறுத்தி விட்டு… தோளில் இருந்த துண்டினால்.. நெற்றியில் சுரந்த வியர்வை மணிகளைத் துடைத்துக் கொண்டே தான் அவளைப் பார்க்கலானார்.
“என்ன?? நம்ம நிரோ வீட்லயா.?? இதை முன்னமே சொல்றதுக்கு என்ன??. சரி.. அப்போ இன்னைக்கு போய்.. ஜிம்மிய கையோடு கூட்டிட்டு வந்துடு..”என்று கூற.. மதுராக்ஷியோ… விழியகல.. அவரையே பார்த்துக் கொண்டு நிற்கலானாள்.
‘என்ன?? ஜிம்மியைப் போய் அழைத்து வருவதா??”
‘இல்லாத ஜிம்மியை வா வான்னா எப்டி வரும் ராம்கி?’ என்று உள்ளுக்குள்… படபடப்பாக எண்ணிக் கொண்டவள்… ஒரு பொய் சொல்லி விட்டு.. அப்பொய்யை மறைக்க.. மென்மேலும் பொய்கள் சொல்லி…. அதனை மறைக்கத்தான் பார்த்தாள் அவள்.
“இஇஇ… இல்லைப்பா.. அது முடியாதுப்பா… ரீசன் என்னன்னா .. நிரோ அப்பா வீ.. வீட்ல. இ… இல்ல.. பிஸினஸ் விஷயமா வெளியூர் போயிருக்காரு.. அதனால தான்… அவ துணைக்கு இருக்கட்டுமேன்னு கூட்டிட்டுப் போனாப்பா…”என்று மீண்டும் ஒரு பொய் சொல்லி விட்டு… அவர் முகத்தைப் பார்க்கலானாள்.
“ஓகேமா.. பட் நாளைக்கே… போய் எடுத்துட்டு வந்துரு… ஜிம்மியப் பார்க்காமல்.. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு”என்று தந்தை செல்லப்பிராணி மேல் மகன் போல வைத்திருந்த பாசம் இயல்பாய் மீதூற கூற.. அவளுக்கோ இதயம் வேக வேகமாக அடித்துக் கொண்டது.
நாளையே போய் எடுத்துக் கொண்டு வருவதா?? முடிகிற காரியமா?? உண்மை சொன்னால் அவன் தருவானா??
எனவே மீண்டும் சமாளிக்குமுகமாக.. “நிரோ அப்பா வர்ற திங்கள் தான் வருவாராம் … அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கங்கப்பா… ஜிம்மியில்லாத கவலை எனக்கு மட்டும் இல்லையாப்பா?”என்று வெண்ணைய் தடவியது போல மென்மையான வார்த்தைகளால் கூற… தந்தை அதற்கு இணங்குவதாய் இல்லை.
“நீ என்ன சொன்னாலும் என்னால முடியலமா.. நீ போய் நாளைக்கு எடுத்துட்டு வந்துடு”என்று தந்தை கூற.. அவளுக்கோ… சுவற்றில் மோதி மோதி… துவண்டு போன உணர்வு தான்!!
கூடவே மனக்கண்ணுள் மீண்டும் பத்திரிகையில் வரப்போகும் அவளது வருங்கால “அக்யூஸ்ட்” புகைப்படம் நினைவு வர… கையறு நிலையில் எதுவுமே செய்ய முடியாது ஸ்தம்பித்து நிற்கலானாள் ஒரு சில விநாடிகள்.
பிறகு சமாளித்துக் கொண்டு… வழிக்கு வரவே மாட்டேனென்ற தந்தையை போலிக் கோபத்துடன் நோக்கி.., இரையும் குரலில், “அப்பா!! இது என்னப்பா ஞாயம்..?? உங்களுக்கு ஒரு சட்டம்.. எனக்கொரு சட்டமா?? ”என்று சம்பந்தம் சம்பந்தமேயற்று வினவ.. தந்தையோ புதல்வியில் திடீர் கோபத்துக்கு காரணம் புரியாமல் தான் விழிக்கலானார்.
“என்ன உளர்றே?? சட்டத்துக்கும், ஜிம்மியை அழைச்சு வான்னத்துக்கும் என்ன கனெக்ஷன்… ஒண்ணுமே புரியல..”என்று தந்தை ஆசுவாசமாய்.. விழிகள் இடுங்கக் கேட்க..அந்த இடைவெளியைப் பிடித்துக் கொண்டவள்….
“பின்னே என்னப்பா.. நீங்க சொல்றத மட்டும் நான் கேட்கணும். . ஆனா நான் சொல்றத நீங்க கேட்க மாட்டீங்க அதானே… நான் கல்யாணத்துக்கு உங்க பேச்சை கேட்டு.. சம்மதிச்சேன்ல.. அதே போல.. நீங்களும் என் பேச்சைக் கேட்டு மன்டே வரைக்கும் பொறுத்துக்க… முடியாதா??? ”என்று கூற… அவளது தந்தையோ.. பார்வையைக் கீழே குனித்துக் கொண்டே ஒரு சில கணங்கள் யோசிக்கலானார்.
யோசிக்கட்டும்.யோசிக்கட்டும்.தந்தை யோசித்தாரானால்.. அது அவளுக்கு அநேக சந்தர்ப்பங்களில் சாதகமாகவே முடிந்திருக்கிறது!!
இன்றும் நிச்சயம் சாதகமாகவே முடியும்!! என்று எண்ணியவளின் அனுமானங்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு சரியே!!
மென்புன்னகையுடன்.. மகளின் உச்சந்தலை தொட்டு வருடியவரோ… இதமான குரலில், “சரிம்மா.. அப்பா நீ சொல்றத கேட்கறேன்… எப்படியோ ஜிம்மி.. வீட்டுக்கு.. வந்தால் ஓகே”என்று சொன்னதும்.. அவள் முகம் மலர..தந்தையைத் தாவி கட்டிக் கொண்டவள்.. “தேங்க்ஸ்ப்பா”என்று நன்றி சொல்ல.. அவள் தந்தை சற்றே தலையை சாய்த்து..,
“யுவர் ஆல்வேஸ் வெல்கம் டியர்”என்றபடி தன்.. முத்துப் பற்கள் காட்டி சிரித்தார் அவர்.
வீட்டுக்குப் போனதும்… அவளது பாஸ்!! அதான் அந்த ஹிட்லர் பேரன்!! அஜய்தேவ் சக்கரவர்த்தியிடமிருந்து… ஓரழைப்பொன்று…அவளது செல்லுக்கு வந்திருந்தது!!
அவள் விடுப்பிலிருந்த இந்த இரண்டு நாட்களாய்.. ‘பாஸ்” என்ற ரீதியில் அவனிடமிருந்து அழைப்பு வருவதெல்லாம் ரொம்பவும் சகஜமாகித் தானிருந்தது.
முதலில் அவளுக்கும்.. அஜய்யின் அழைப்பினை எடுத்துப் பேச பயமும், தயக்கமும் ஊசலாடிக் கொண்டிருக்க… அவள்… அவனது அழைப்புக்களை ஏற்காமலும் தான் விடலானாள்.
காரணம்.. ஒருவேளை அவள், சமாளித்து, ‘ஹலோ’ என்று மறுபதிலளித்ததும் .. சினிமாக்களில் வரும் வில்லனைப் போல பேய் சிரிப்பு சிரித்து,
“ஹா.. ஹா.. ஹா..என் காரை திருடிய திருடி யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்.. ஹேய்… மதுராக்ஷி ராமகிருஷ்ணன்.. என்கிட்டேயிருந்து அவ்ளவு சுலபமா தப்பிச்சிடலாம்ன்னு பார்க்குறீயா… இந்த நாள.. உன் கேலண்டர்ல குறிச்சு வைச்சுக்கோ… எப்படி என்னோட ஹைபிரிட் பென்ஸ் காரை நீ நாசம் பண்ணீயோ… அதே போல உன் ஜிம்மியை வைச்சு.. உன் மானத்தை வாங்கி.. உன் பேரை நான் நாசம் பண்ணல.. நான் அஜய்தேவ் சக்கரவர்த்தி இல்ல!!! அன்டர்ஸ்டான்ட்??” என்று சபதமளிப்பது போல… டயலாக் எல்லாம் விடுவானோ என்று பயந்து.. பயந்து தான் முதலில்.. அவனது அழைப்பை ஏற்காமல் விட்டாள் அவள்!!
ஆனால்… அன்று ஓயாமல் அவளது செல்லுக்கு அழைப்பு வந்து கொண்டேயிருக்கவே.. ஒருக்கட்டத்தில் அவன் ரோதனை பொறுக்க முடியாமல்… அவனது அழைப்பைத் தயங்கித் தயங்கி ஏற்ற வேளை… அவள் நினைத்தது போல ஒன்றும் அசம்பாவிதமாக ஏதும் நடக்கவேயில்லை!!
மாறாக.. அவளின் உடல்நலன் பற்றி.. மிகுந்த அக்கறை கொண்ட ஒரு தோழன் போல அவன்.. அவளோடு பேசியதுவும்.. அவளது தயக்கமெல்லாம் தற்போது அடியோடு அகன்றிருந்தது.
அதனால் தான்.. இன்றும்.. அவள் முன்னிலையில்.. அழைப்பாளர் ஐடியில்.. “பாஸ்” என்ற அவன் பெயரைத் தாங்கி.. அவளது செல்லும் தான் சிணுங்கவே..
அலைக்கழிப்பு மீதூற.. மெல்ல அவனது அழைப்பையேற்றாள் அவள்!!
இவளோ காற்றுக்கும் கேட்காத மெல்லிய குரலில், “ஹலோ…”என்றதும் தான் தாமதம்… மறுமுனையில்.. அவளது குரலுக்காகவே ஏங்கிக் கிடந்தது போலக் கேட்டது அவ்வாணழகனின் குரலில்!!
“எப்டியிருக்க.. மதுஹ்.. ரா? இப்போ உடம்புக்கு எப்படியிருக்கு?” என்று அவள் பெயரை அவன் மாத்திரம் வித்தியாசமாக உச்சரிக்கும் விதத்தில் உண்மையில் ஒரு காந்தம் இருப்பது போலவே தான் உணர்ந்தாள் அவளும்!
ஏதோ மென்சாரலாய்… அவனது இதயத்தை நனைக்கும் வண்ணம் அஜய்தேவ்வின் செவிகளில் வந்து நுழைந்து ஹிருதயம் வரைத் தீண்டியது அவள் குரல்!!
ஆனால்.. ஆடவனின் மெய்யன்பின் ஆழம் பற்றி.. இன்னும் சரிவர உணராதவளோ… அவன் அழைப்பெடுத்து.. மேற்கேட்ட கேள்வியை கேட்ட போதெல்லாம், ‘பரவாயில்லை சார்.. இப்போ மச்பெட்டர்.. ஐ ஆம் பெர்பெக்ட்ளி ஆல்ரைட்’ என்று ஒருபோதும் சொன்னதேயில்லை.
மாறாக, அவள் தந்தை வைத்தியர் என்பதால்.. அதனைக் காரணங்காட்டி,
பாவம் போல குரலை வைத்துக் கொண்டு, “அப்பா இன்னும் ரெஸ்ட் எடுத்துக்கிட்டா.. நல்லதுன்னு சொல்றாரு சார்..”என்றே கூறுவாள் கேடிப்பெண்ணும்!!
அதே பதிலையே பழைய டேப் ரிக்கார்டர் போல இன்னும் கூற.. ஏற்கனவே.. அவளது இந்நிலைமைக்கு காரணம் நான் தான் என்னும் குற்றவுணர்வில் இருந்தவனோ… இன்றும் அதே போல தவித்துத் தான் போனான்!!
அவனும் அதனை உண்மையென நம்பி, பரிதாபம் சிந்தும் குரலில்,..“ஓ… அப்படியா.. இப்போ நடக்க முடியுதா?”என்று கரிசனையுடன் விசாரிக்க.. அவனது “சிம்ப்பதி”யை வைத்து விளையாடிப் பார்க்க ஆசை கொண்டாள் மதுராக்ஷியும்.
“காலை அசைக்கவே முடியல சார்.. அன்னைக்கு வேற.. உங்க கார க்ளீன் பண்ணேனா… அதோட எஃபெக்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன் சார்” என்று கூற.. அவளை அப்பணி செய்யச் சொல்லி ஏவிய தன்மீதே பெருங்கோபம் எட்டிப்பார்த்தது அஜய்க்குள்!!
அவளை இக்கணமே வீட்டில் வந்து பார்த்து விடும்.. வெறியே அந்த இரகசிய காதலனுக்குள் முகிழ்க்க… “நான் இப்பவே கிளம்பி… உன் வீட்டுக்கு வர்றேன்.. எனக்கு தெரிந்த.. ஸ்பெஷல்.. நியூராலஜிஸ்ட் இருக்காரு.. டாக்டர். சிவ சங்கர்… அவர்க்கிட்ட நானே கூட்டிப் போறேன்… கெட் ரெடி… ஓகே??”என்று காருண்யத்துடன் அவன் சொல்ல… இவளுக்கோ இங்கே இதயம் ஒருமுறை நின்று தான் துடித்தது.
அவளது எஜமானன் வீட்டிற்கு வந்தால்… ஐயோ அவளது குட்டும் தான் வெளிப்பட்டு விடுமே?? ஆகையால் எப்பாடுபட்டாவது அவன் வருகையை தடுத்து நிறுத்தவே முயன்றாள் மதுரா.
“எ.. என்ன பேர் சொன்னீங்க…டாக்டர் சிவசங்கரா..?? ஐய்யோஓஓ… அவருக்கு நூறாயிசு சார்… இன்னைக்கு பத்து மணிக்கு அவரை கன்சல்ட் பண்ண தான்.. அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கேன் சார்…நானும், என் ப்ரெண்டு நிரோவும் போகலாம்னு இருக்கோம்”என்று அவன் வருகையைத் தடுத்து நிறுத்த.. வாயில் வந்த கப்சாக்களையெல்லாம் அடித்து விடலானாள் அந்த எமகாதகி!
அவனோ அதன்பின்னர் தான் சற்றே ஆசுவாசமாகி.. சற்றே நிம்மதிப் பெருமூச்சுடன், “ஓகே.. இட்ஸ் குட்.. இட்ஸ் குட்..”என்று சொல்லிக் கொண்டிருந்த வேளை..
அப்போதேனும் சும்மா வையை வைத்துக் கொண்டு இருந்திருக்கலாம் அவளும்!!
அவளோ, தந்தை இன்று ஜாகிங் நேரம்.. ஜிம்மியை ஞாபகப்படுத்தியதனால்.. அதனைப் பற்றி அவனிடம் குசலம் விசாரிக்க நாடியவளோ, “ஜிம்மி.. எப்படியிருக்கு சார்??” என்று ஜிம்மியை அழைக்கும் பழக்க தோஷத்தில்.. அதன் பெயர் சொல்லியே கேட்டு விட்டாள் அவள்!!
“ஜிம்மியா? அது யாரு?? ”என புரியாதவனாய் கேட்க.. அப்போது தான் அவளையுமறியாமல்.. ஜிம்மியின் பெயரை வெளியே விட்டிருப்பது புரிய மறுகணம்.. கைகளை உதறிக் கொண்டே நாக்கைக் கடித்துக் கொண்டாள் அவள்!!
பின்னர் சமாளிக்குமுகமாக… திக்கித் திக்கி… “.. அ.. அது அது நான்.. அந்த பப்பிக்கு வைச்ச பேரு சார்… ”என்று கதையை உல்டாவாக்கி விட… அவனும் சகலதுமறிந்திருந்தும்… அவளது உருட்டுக்களும், புரட்டுக்களும் தரும் சுவாரஸ்யத்தை எண்ணி… புன்னகை சிந்தவும் தான் செய்தான்.
‘இந்த விஷயம்.. எவ்ளவு தூரம்.. எவ்ளவு நாளுக்கு செல்கிறது பார்ப்போம்?’ என்று மனத்தினுள் உருப்போட்டுக் கொண்டே…
மறுமுனையிலிருந்த யௌவனப்பெண்ணிடம் தானும் விளையாடிப் பார்க்க நாட்டம் கொண்டு..
“ஓ.. அப்படியா.. உன் ஜிம்மி .. நல்லா சாப்பிட்டுட்டு…தூங்கிட்டிருக்கு..”என்றான்.
இங்கே இவளுக்கோ… அவன் பதில் சொல்லி முடிக்கும் வரை… நெஞ்சமெல்லாம் யாரோ அழுத்திப் பிடிப்பது போல.. மூச்சுக்கும் சிரமமாகித் தான் போனது.
அதனால் மேற்கொண்டு பேச்சினை வளர்க்காமல்.. அத்தோடு அதனைக் கத்தரித்து விட நாடியவளோ, “ஓ.. ஓகே சார்.. இப்போ டாக்டரைப் பார்க்க போக தயாராகணும்.. நான் அப்றம் பேசுறேன் சார்..”என்றபடி…அழைப்பைத் துண்டித்து விட்டு நிமிர்ந்தவளுக்கு…
ஜாகிங் செய்ததை விடவும் அதிகமாக வியர்த்திருந்தது அவனுடன் பேசியதன் பிற்பாடு!!
கடவுளே போயும்… போயும் உலோகத்தால்… செய்யப்பட்ட.. காருக்கு கேக்கினை பூசியதாலா.. இத்தனை பேரையும் ஏமாற்ற வேண்டிய நிலை அவளுக்கு??
முதலில்.. காரைக் கழுவாமலேயே கழுவியது போல பாவ்லா செய்து..தலைசுற்று வந்தது போல் நடித்து… ஆஸ்கார் வாங்காத குறையொன்று மாத்திரமே அன்றில்லை!!
பிறகு… அவளை ஈன்றெடுத்த தாய், இன்று அவளது தந்தை என்று அவளது ஏமாற்றும் பட்டியல் நீண்டுகொண்டே போக… இன்னும் இன்னும் இந்தப் பட்டியல் நீளுமோ என்ற அச்சம் அவளுள் துளிர் விடலானது.
டவலை எடுத்துக் கொண்டு குளியலறை புகுந்து.. ஷவரினைத் திறந்து.. தன் மேனியெங்கினும் நீரை ஓடவிட்டவளுக்கு… கொலைக்குற்றம் புரிந்த…. குற்றவாளியை விடவும்.. அவள் மோசமான நிலையிலிருப்பதாக உணர்ந்நாள் அவள்.
‘ ஊருல கொலை, கொள்ளை பண்ணவன்லாம் நிம்மதியா இருக்கான். இத்தனூண்டு கேக்க.. அவன் கார்ல பூசிட்டு.. ஐய்யைய்யோ அவள் படும்பாடு!! முடியல’என்று அவள் மனம் அவளிடமே கதறி வாய் விட்டு அழுதது!!
அந்தச் சிறு குற்றத்திலிருந்து தப்பிக்க .. எத்தனை பொய்கள்..?? எத்தனை ஏமாற்றுக்கள் என்ற குற்றவுணர்வு.. அவளை நிம்மதியாக இருக்க விடாது வாட்டி வதைக்கலானது.
குளித்து முடித்து விட்டு வந்து.. தலையைத் துவட்டிக் கொண்டே.. அவள்.. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்த போது.. அதில்.. ஐந்தரையடி உயரத்தில் இருந்தது என்னவோ அழகி தான்!!
ஆனால் அந்த இரம்மியமான முகமோ.. துடிதுடிப்பான உற்சாகக் களையோ என்பது தற்போது.. அவளில் நின்றும் அகன்று.. ஏதோ.. கண்ணாடியில் தெரிந்த விம்ப மதுரா.. அவளுக்கு எஞ்ஞான்றும் பிடிக்காத மதுராவாகவே தோன்றியது.
‘எல்லாம் விதி’ என்று தலையெழுத்தை நோவுவதா..??
இல்லை தன்னைத் திட்டினான் என்பதற்காக அவனை கங்கணம் கட்டிக் கொண்டு போய்.. பழிவாங்கி..அவளாகவே இழுத்து வந்த வினை என்றெண்ணி தன்னைத் தானே நோவுவதா?? .
பேசாமல் போய் எல்லா உண்மைகளையும் ஒத்துக் கொண்டாள் தானென்ன??
ஆனால் அவன் நம்புவானா..??
சம்பவம் நடந்த மறுநாளே.. அவளிடமே எம்மாம்பெரிய கட்டுக்கதைகளையெல்லாம் கட்டினான் அத்திருடி மீது!!
‘நீ காரைத் திருடத்தான் வந்தாய்’ என்று ஒரேயடியாக நம்ப மறுத்து விட்டால்?? அவளும் தான் என்செய்வாள்?? அதன் பிற்பாடு… நடக்கப் போவதை நினைக்கையில் சற்று பயமாகவே இருந்தது.
ஆடை மாற்றி விட்டு கீழே வந்தவள்… தாய் செய்து வைத்திருந்த காலையுணவு இட்லியை… கப்சிப்பென்று விண்டு விண்டு உள்ளே தள்ளிவிட்டு… சாவி போட்ட பொம்மை போல உள்ளே மீண்டும் அறைக்கு வந்து சேர்ந்தாள்!!
ஏனோ அவளது பழையத் துடிப்பு அவளில்லை!!
பழைய கலாய்த்தலும், அரட்டைகளும் அடியோடில்லை!!
மோகனம்-12
குட்டி விபத்தின் பின்.. மதுரா பழையத் துடிப்பற்று இருப்பது புரிந்த.. தாய்க்கும், தங்கை திவ்யாவுக்கும்.. மணவாழ்க்கை நெருங்கி வருவதால்… தாயையும், உறவுகளையும் பிரியப் போவதை எண்ணி எண்ணி… விழைந்த மன அழுத்தம் என்று அவளின் செயல்களுக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டவர்கள்… ஒரு போதும் உண்மை அறியாமலேயே போயினர்.
மஞ்சத்திலமர்ந்து …மடிமீது தலையணையை வைத்துக் கொண்டு, விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு… ‘கார் திருட்டை’ப் பற்றியே.. மதுராக்ஷி தீவிரமாக யோசித்தபடியிருந்த போது.. அவளது அறைக்கு அரவமேயெழுப்பாமல் வந்தாள் தங்கை திவ்யா!!
தங்கை வந்ததே தெரியாமல்.. விழிகளிடுங்க.. புருவமத்தியில் முடிச்சுக்கள் விழ ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதைப் பார்த்து விட்டு .. தமக்கையை நோக்கி குரலினை செருகினாள் திவ்யா.
செருகல் சப்தம் கேட்டு சிந்தனை கலைந்து திரும்பிய மதுராவோ.. எதிரே தங்கையிருப்பது கண்டு… மென்மையாக முறுவலிக்க.. திவ்யாவும் பழையபடி தமக்கையை கலாய்க்கவே எண்ணங்கொண்டாள்!!
“என்னக்கா… நான் வந்து.. உன் லாங் டூயட்ட கலைச்சிட்டேனா?”என்று போலியாக வருந்துவது போல முகத்தை வைத்துக் கொண்டு… தமக்கைக்கு நேரெதிராக மஞ்சத்தில் அமர்ந்த வண்ணமே கேட்டாள் திவ்யாக்ஷி!!
திடீரென்று சிந்தை கலைந்து நடப்புலகுக்கு வந்ததாலோ என்னவோ… தங்கை எதை உளறுகிறாள் என்பது புரியாமல்.. பெரியவள் விழிக்க..
இளையவளோ.. கேலி பேசும் குரலில், “சும்மா புரியாதது போல நடிக்காதேக்கா.. நீ மாமா கூட தானே… டூயட் பாடிட்டு இருந்த..??”என்று கேட்கத் தான்.. மதுராவுக்கு விஷயமே புரிந்தது.
அட ஆமாமில்லை?? அவளுக்குத் தான் திருமணம் பேசி முடிவாகி விட்டதே!! திவ்யா சொன்ன, ‘மாமா’ அவளது வருங்காலக் கணவன் தானல்லவா??
இன்னும் அவனின் புகைப்படம் கூடப் பார்க்கத் தோன்றாமல்… அஜய் என்னும் அரக்கனின் சூழ்ச்சியிலிருந்து எப்படி தப்புவது என்றே சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு… அவளது வருங்கால மணாளனை அப்போது தான் ஞாபகத்துக்கே வந்தது.
அவன் யாரென்றே முதலில் அவளுக்குத் தெரியாது. இன்னும் ஏன்.. அவன் பெயர், ஊர், வயது, படிப்புத் தகைமை.. அவன் தோற்றம்?? உயரமா குள்ளமா?? என எதுவும் கூட அவளறியாமலேயே இருந்தாள்.. அதுபற்றிய அசுவாரஸ்யத்துடன்!!
அப்படியிருக்கையில்… எப்படி டூயட்.. சாத்தியம்?? ராமா!!
இந்தக் கார் விஷயம் மட்டும் இந்தளவு தூரத்துக்கு வந்திருக்காவிட்டால் இந்நேரம் அவளெப்படி.. தந்தை நிச்சயித்த திருமணத்தை நிறுத்துவது என.. அவளின் “பார்ட்னர் இன் கிரைம்”மான நிரோவுடன் சேர்ந்து… ரூம் போட்டல்லவா யோசித்திருப்பாள்!!
இந்தக் கதையின் போக்கும் வேறாக அல்லவா அமைந்திருக்கும்??
மதுராக்ஷியின் முகத்தினை நோக்கி மறுபதிலுக்காகக் காத்திருந்தவளிடம்.. சுள்ளென்ற சீற்றம் பாய, “ஹேய்.. ஈடியட்.. என் முகத்தைப் பார்த்தால் உனக்கு.. ரோஜா மலரே ராஜ குமாரின்னு டூயட் பாடிட்டிருக்கறது போலா இருக்கு…”என்று திவ்யா மீது எரிந்து விழவும் தான் செய்தாள் நாயகி!!
துக்கம் மேலோங்கும் சிணுங்கும் முகபாவனையுடன், “பின்னே என்னக்கா.. நீ முன்ன போல இல்ல… அடிபட்டதுல இருந்து ரூம்லயே அடைஞ்சு கிடக்க..எப்போ பாரு ஏட்டிக்குப் போட்டியா… நான் பேசுறதுக்கு எல்லாம் கவுன்டர் கொடுத்துட்டேயிருப்ப… ஆனா இப்போ…. என் கண்முன்னாடியிருக்கறது என் அக்கா தானான்னு இருக்கு. என்னோட இந்த மூணு நாளா… நீ. சண்டையே போடல தெரியுமா??..”என்று கூறத்தான்… மதுராக்ஷியின் மாற்றம் அவளுக்கே புரிந்தது.
அவள் இப்படி பழைய சோபையெல்லாம் இழந்து.. நிற்கும் கதை.. தங்கை வந்து எடுத்துச் சொல்லும் வரை அவளுக்கே புரியவில்லை.
அவளேன் இப்படி மாறிப் போனாள்??இந்த மூன்று நாட்களாக.. அறையிலேயே அடைந்து கிடந்த வண்ணம்.. இவளா இப்படி மண்டையைக் குடைந்து குடைந்து.. சிந்திக்கிறாள்??
எந்தக் கவலையாக இருந்த போதிலும்.. அதனை ஐந்து நிமிடத்திற்கு மேலதிகமாக.. யோசிக்காத அவள் மூளையா இப்படி யோசிக்கிறது??
இல்லை.. ஒருநாளும் அவள் தன் இயல்பு திரிந்து இருக்கப் போவதில்லை!! பழைய ஜாலியான… குறும்புத்தனம் கொண்ட பெண்ணாக மாற எண்ணியவளோ… அடுத்த கணம் மஞ்சத்தில் நின்றும் விருட்டென்று எழுந்தாள்!!
படுக்கையில் அமர்ந்திருந்த தங்கையின் கைகளைப் பற்றிக் கொண்டவளாக.. பழைய குறும்பு மின்ன, “ஸாரி திவ்யா.. இனி இப்டி இருக்க மாட்டேன்..வர்றீயா… நீயும், நானும் ..தலைவர் நியூ ரிலீஸ் படத்துக்கு போலாம்… கமான்.. வாட் டு யூ சே?.”என்று தன் குதூகலத்தில் பங்கு கொள்ள… பழைய மதுராக்ஷியாக தங்கையையும் கூட அழைத்தாள் அவள்.
ஆனால் திவ்யாவோ… தமக்கை பழையது போல துடுக்குத்தனமாக முயற்சிப்பது கூட சிறிய மனமகிழ்வைக் கொடுக்கவே,
“வேணாம்க்கா… நீயும், நிரோவும் வேணா.. போய் வாங்க.. நான் தாமரை வீட்டில்… க்ரூப் ஸ்டடி பண்ண போறேன்.. வர ஈவ்னிங்க் ஆகும்… செமஸ்டர் எக்ஸாம்ஸ் வேற நெருங்கிட்டிருக்குல்ல..”என்று கூறியவள்…. அங்கிருந்து .. சிரித்துக் கொண்டே செல்ல.. மறுகணம் சிறிதும் கூட தாமதியாமல்.. உயிர்த்தோழி நிரோவுக்குத் தான்.. அழைப்பெடுத்தாள் மது.
தலைவரின் புதுப்படத்திற்கு.. நிரோவைப் படம்பாக்க வருகிறாயா என்று கேட்பதற்காக…. அழைப்பெடுத்து.. மறுமுனையில் நிரோஷனா அழைப்பையேற்கும் வரை காத்திருக்க… ஆனால் நிரோவோ.. அழைப்பை எடுத்தவுடன் கூறிய கதையோ வேறாய் இருந்தது.
மறுமுனையிலிருந்த நிரோவோ… படபடவென பொறிந்து தள்ளும் குரலில், “ஹேய் லூசு… ஜிம்மி என்வீட்லன்னு அங்கிள் கிட்ட சொன்னீயா..”என்று திட்டிய வண்ணம் கேட்க…இன்று காலை ஜாகிங் நேரம் தந்தையிடம் கூறியது இவளுக்கு எப்படி அத்தனை துரித கதியில் தெரிந்தது என்று ஆச்சரியம் தான் மிகலானது.
அவளது தந்தை அழைப்பெடுத்து ஜிம்மியை விசாரித்திருக்கிறார் போலும்.
மதுராக்ஷியும்… தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டவாறே, “ஆமான்டீ… அந்த அஜய் இருக்கான்ல… என் பாஸ்… அவன் கிட்ட… என் ஜிம்மி மாட்டிக்கிச்சு…. அப்பா என்னடான்னா..ஜிம்மியை காணாமல்… நான் போலீஸ் க்கு போறேன்னுட்டாரு.. எனக்கு ஒரு நிமிஷம்… கையும் ஓடல.. காலும் ஓடல.. அதனால தான்.. ஜிம்மி உன் வீட்டுலன்னு சொல்லிட்டேன் .. அப்பாக்கிட்ட ஏதாவது உளறிட்டீயாடீ..”என்று சோகமாகக் கேட்கலானாள்.
நிரோவும் தான்.. இவளுடைய பங்காளிக் கள்ளியாயிற்றே?? அவளா தன்னுயிர்த் தோழியைக் காட்டிக் கொடுக்கவும் கூடும்??
“பரவாயில்லை.. எப்படியோ சொல்லி சமாளிச்சுட்டேன்… இன்னொரு தடவை… ஏதாவது விஷயத்துல என்னை நீ கோர்த்து விடணும்னு.. நினைச்சேன்னா..ப்ளீஈஸ் சொல்லிட்டு செய்”என்றவளுக்கு.. நண்பி தன்னைக் கோர்த்து விட்டதில் எல்லாம் ஒருதுளியும் பிரச்சினையில்லை.
மாறாக, சொல்லாமல் கொள்ளாமல் கோர்த்து விட்டதில் தான் வருத்தமாம்!!
தோழியின் அன்பு மனதை இன்னும் இன்னும் இலேசாக்கவே.. அழைப்பெடுத்த காரியத்தை வினவ நாடியவளோ, “சரி அதை விடு.. இன்னைக்கு தலைவர் புதுப்படம் ரிலீஸ்… பார்க்க போலாமா?”என்று கேட்க…
இரு களவாணித் தோழிகளுக்குள்ளும் தான் என்னேவொரு ஒற்றுமை!!
அதே விஷயத்தைக் கூற வந்து ஜெர்க்காகி நின்றவளும், “வாட் அ கோ இன்சிடென்ட் பார்த்தீயா.. நானும் அதைத் தான் கேட்கலாம்னு நினைச்சேன்… நம்ம அனு, மாலா, கீதா ன்னு கேங்க் எல்லாரும் படத்துக்கு போறேன்னாளுங்க… சீக்கிரம் சீக்கிரம் நீயும் கிளம்பி வா… தலைவர் படம்னா.. கூட்டம் அலைமோதும்ல..?? நேரகாலத்தோட போனா தான் உண்டு”என்று… மதுராக்ஷியையும்.. படம்பார்க்க அழைக்க… அவளும்.. தன் கூட்டுக்கிளிகளோடு ஜோதியில் ஐக்கியமாகி.. படம் பார்க்க… பறந்து செல்லத் தான் விழைந்தாள்!!
தோழி நிரோ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே!! தியேட்டரிற்கு நேரகாலத்துடன் செல்ல வேண்டும். இல்லையானால், ஜனநெருக்கடி.. அதிகமாக இருக்குமென்று தீர்மானித்தவளும்… முதல் ஆளாகவே தியேட்டரிற்கு வந்து நிற்க… அன்று தன் வாணாளில் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு விசித்திரமொன்று நிகழ்ந்தேறுமென்று அவள் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
அஜயோ…. தன் புது அந்தரங்கக் காரியதரிசி.. சுகயீனமுற்று.. உயிரும், உடலும் வருந்த வீட்டிலிருக்கக்கூடுமென்று எதிர்பார்த்திருந்தானே ஒழிய…. மதுராக்ஷி.. அவன் தியேட்டரிற்கு செல்ல முடிவெடுத்த அதே நேரத்தில்.. திரையரங்கத்தில் இருக்கக் கூடுமென்று…அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை!!
இந்த ஒற்றை நிகழ்வு போதாதா.. அங்கே பெரும் பிரளயமே வெடிப்பதற்கு!!!
எப்போதும் வேலை வேலையென்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழல்பவனையும்…. தடுத்து நிறுத்திய அவனது பால்யகால நண்பனொருவனோ, அஜய்யை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்து,
“வாடா… மச்சி.. மூவிக்குப் போகலாம்…”என அழைத்து வந்திருக்க… சினிமா பார்ப்பதில் எல்லாம் அத்தனை நாட்டம் காட்டாதவனும்.. வேண்டா வெறுப்பாக..அரை மனதாக வந்து தொலைந்தானில்லையா..??
அங்கே… தன் நண்பிகள் பட்டாளத்திற்காக… உள்ளரங்கின் வாசலில்… அரக்கப் பறக்க பொறுமையேயின்றி காத்திருந்தவள்.. அவன் கண்ணில் பட்டுத் தொலைந்தானில்லையா??
அவளது உயிர்த்தோழி நிரோஷனாவோ…படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாப்கார்ன் வாங்கவென… போயிருக்க… அன்றைய நாளிற்கு… ஏற்றாற் போல லேடீஸ் டீஷேர்ட் மற்றும் டெனிமில்…
கைகளில் பரபரப்புடன் செல்லை இறுக்கிப் பிடித்துக் கொண்டு… விழிகளில்.. தோழிக்கான ஒரு அலைக்கழிப்பான தேடலுடன் நின்றிருக்கும்… மதுராக்ஷி அவன் கண்களில் விழுந்தாள் நேரிடையாக!!
அவள் தான்.. அங்கே தன் பாஸ் நின்றிருப்பதை அறியவில்லையாயினும் கூட… அங்கே டாக்டரைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்ன அதே நேரத்தில்… தியேட்டரில் அவள் நின்றிருப்பது பேரதிர்ச்சியைத் தான் கொடுக்கலானது அஜய்தேவ்விற்கு!!
செஞ்சீற்றம் உகுத்த அவன் விழிகளோ… உச்சாதி பாதம் வரை..ஆய்ந்து.. அவள் நலம் தானா என்று ஸ்கேன் செய்தவை… அவள் கையிலும், காலிலும் போட்டிருக்கும் கட்டுக்காகத் தான் நோட்டம் விடலாயிற்று.
அவள் கைகளோ.. நன்கே அசைந்து.. நெற்றி மறைத்து வீழ்ந்த கூந்தலை காதுக்குப் பின் சொருகிக் கொள்ள… பாதங்களோ.. நிரோ வரும் திசை நோக்கி… எந்தவிதமான தடங்கலுமற்று… தேடலுடன் ஓரெட்டு நடக்க…. அவற்றையெல்லாம் பார்த்து… அஜய்யின் விழிகளும் தான் விரிந்தது சற்றே அகலமாக!!
நாசித்துவாரம் விடைத்தடங்க.. முஷ்டி மடக்கி நின்றவளுக்கு… மதுராக்ஷி தன்னை முட்டாளாக்கியிருப்பதில் முகிழ்த்ததே பெருஞ்சீற்றம்!!
அவள் ஊரையே ஏய்ப்பவளாக இருந்த போதிலும்.. அவளை தலையாலேயே தண்ணீர் குடிக்க வைக்கும் விந்தை அறிந்திருந்தவனோ… தானிருந்த இடத்தை விட்டும்.. அங்குமிங்கும் நகராமல்…
அவளைப் பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கிய வண்ணம், தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த செல்லையெடுத்து அவளுக்கு அழைப்பெடுத்தான்!!
அங்கே கவுன்டர் முன் அலைக்கழிப்புடன் நிரோவுக்காக நின்றிருந்தவளோ.. செல் சிணுங்கவும்.. திரையைப் பார்த்த போது… அழைக்கும் நபரின் பெயரைக் கேட்டு… உள்ளுக்குள் மிடறு கூட்டி விழுங்கிக் கொண்டே தான் நின்றாள்!!
இருப்பினும் அழைப்பையேற்றவளோ… தயங்கித் தயங்கி, “ஹலோ…”என்ற மறு நொடி.. அவனிடமிருந்து தாமதியாமல் வந்தது கீழ்வரும் கேள்வி!!
“இப்போ நீ எங்கேயிருக்க மதுரா??”
அவளோ.. தன் எஜமானன் எடுத்ததும் இப்படியொரு கேள்வி கேட்கக்கூடுமென்று எதிர்பார்த்திராதவள்… திருதிருவென விழிக்க.. அதை அவன் பார்த்திருப்பது அறியாமலேயே பதில் சொல்லலானாள்.
ஆனால் அஜய்க்கோ.. தன் வித்தாரக்கள்ளியின் அந்தத் திருட்டு விழியையும், அவளது திணறல் மூச்சுக்களையும் கண்டதும்… ஏனோ கொஞ்சம் கொஞ்சமாக சீற்றம் அகன்று அதனை மனம் விட்டு இரசிக்கத் தான் ஏகியது உள்ளம்!!
இவளோ… திக்கியவளாக, “சா.. சார்.. நீங்..நீங்க ரெக்கமென்ட் பண்ணீங்கள்ல ஒரு நியூராலஜிஸ்ட் ..டாக்டர் சிவசங்கர்.. அவர் கிளினிக்ல தான் இருக்கேன் சார்…. எ.. என் ப்ரெண்டு இருக்கால்ல.. நிநிரோ…. டோக்கன் வாங்க போயிருக்கா… அவ வந்ததும் உள்ளே போயிர்லாம்.. ஏன் சார் கேட்கறீங்க…??”என்று மெல்லிய குரலில் இறுதிக் கேள்வியை இழுத்துக் கேட்க அவனும் தான் சொன்னானே ஒரு பதில்!!
தன்னுள் எழுந்த குறுநகையை இதழ்களுக்குள் மறைத்துக் கொண்டு.. பாஸாக… கறாரான குரலில், “நீயிருக்க.. அதே நியூராலஜிஸ்ட் கிளினிக் ரூம் முன்னாடி தான்..நானும் நின்னுட்டிருக்கேன்…”என்று சொல்ல… முகமெல்லாம் வெளிறி விதிர்விதிர்த்துப் போக…
அல்லாடித் தள்ளாடி… சுற்றுமுற்றும் விழிகள் திருப்பி.. அஜய்யைத் தான் தேடலானாள் மதுரா!!
‘ஏது… அவளிருக்கும் அதே கிளினிக்கா??’
‘எனில், அவனும் அங்கே தான் படம்பார்க்க வந்திருக்கிறானா?’
அவள் தன்னைத் தேட சிரமப்படுவது கண்டு பெரும் மனப்பான்மையுடன் உதவ நாடியவனோ, “இது… இதோ இங்க லெப்ட்ல..!!”என்று ரூட் சொல்ல..
அவளின் கருகருநயனங்களும் தான் அவன் சொன்ன வழி திரும்பியது!!
அவள் சரியாக.. தானிருக்கும் இடத்தை கண்டுகொண்டாளென்றானதும்… தூரத்திலிருந்த வண்ணமே… தன் அந்தரங்க செயலாளனுக்கு கைக்காட்டியவனாக, “ஹாய்.. மதுரா…”என்று…அவளைப் பார்த்துச் சொன்னான்.
அவளது திருடனுக்குத் தேள் கொட்டியது போன்ற மருளும் விழிகளை இமையாமல் இரசித்த வண்ணமே புன்னகைத்தான் அவன்!!!
அவளோ… காதிலிருந்த செல்லைத் துண்டிக்கக் கூடத் தோன்றாமல்.. கைகள் கீழே தொங்கவிடப்பட நின்றிருக்க….. அவளை நோக்கி.. தன்னழுத்தமான எட்டுக்கள் எடுத்து வைத்து அவளருகே பையப் பைய வரலானான்!!
மதுராக்ஷியோ.. உயிரற்ற சிற்பம் போல… அதே மெய்ந்நிலையில் உறைந்து போய் நின்றிருக்க… தோழியின் குட்டு கையும், களவுமாக பிடிப்பட்டதை அறியாத நிரோவும்…
இரு கைநிறைய பாப்கார்ன் பாஸ்கட்டினை எடுத்துக் கொண்டு… தலைவியருகே வந்து.. “வாடி… அனு, கீதா எல்லாரும் ஏற்கனவே உள்ளே போயாச்சு… வா நாமளும் உள்ளே போகலாம்… படத்த போட்ரப் போறாங்க..”என்று அவளைத் தியேட்டரிற்குள் அழைத்துச் செல்லத்தான் முற்பட்டாள்.
நிரோவோடு செல்லாமல்… தன்னை நோக்கி வரும் அஜய்யைப் பார்த்த வண்ணமே தம் கட்டி நின்றவள், “நீ உள்ளே போ.. நான் பின்னாலேயே வர்றேன்..”என்று தோழியை உள்ளே அனுப்பி விட்டு.. தப்பு செய்து அகப்பட்ட குழந்தை போலத் தான் தொங்கிப் போன முகத்துடன் நிற்கலானான் அவன்.
அவனோ..அவளை அடைந்ததும்.. அவளையே நோட்டம் விட்டு நின்றவனுக்கு… அக்குழந்தை வதனம் காண்கையில்.. அவனையுமறியாமல்.. இரு கன்னம் கைகளில் ஏந்தி முத்தாடிட.. தூபம் போட்டது தாபம்!!
அனிச்சையாய் எழுந்த கைகளை… பேன்ட் பாக்கெட்டிலிட்ட வண்ணம்.. தன்னுணர்வுகளைத் தானே கட்டுப்படுத்தி அவன் நிற்க…
இவளோ.. தவிக்கும் மென்குரலில், “சார்..”என்றாள் காற்றுக்கும் கேட்காத மென்குரலில்!!!
ஆனால் அவனோ… மதுராக்ஷியோ சிறிதும் எதிர்பார்க்காத கணம்.. அவள் இடையூடு கையிட்டு சுற்றி வளைத்து அணைத்துக் கொள்ள…அவள் விருட்டென்று பதறி அதிர்ந்து முகம் பார்க்க அதையெல்லாம் சட்டையே செய்யவில்லை.
அவனோ… பெண்ணவள் என் ஏக உரிமை என்று கொண்டானோ?? எப்போதும் பெண்களிடம் ஒதுங்கி நின்று கண்ணியம் காக்கும் அஜய்யின் கைகள்.. அன்று அவளின் இடை விட்டும் ஏனோ இறங்கவே மாட்டேன் என்று அடம்பிடித்து நின்றது.
அவளது இடையில் இலேசான ஓர் அழுத்தம் கூட்டி, “படம் பார்க்க தானே வந்த… ஏன் நிற்கற.. வா…!!”என்று அவனோடு இழுத்துச் செல்ல நாட… தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு.. அவனது சுற்றிவளைப்பில் நின்றும் வெளிவரத் துடித்து தோற்றாள் அவள்!!
“ஐயோ சார்…”
“என் கூட வர்றதா இருந்த என் ப்ரெண்டுனால வர முடியல.. அவன் டிக்கெட் என்கிட்ட தான் இருக்கு.. வா…விஐபி பாக்ஸில் படம் பார்க்கலாம்”என்று அவன் மீண்டும் அவளை அழைக்க மறுத்து விடத்தான்.. வெடுக்கென்று நாவு நுனிவரை வந்தது அவளது வார்த்தைகள்!!
ஆனால், இப்போது அவனுடன் சென்று நற்பெயரைச் சம்பாதித்துக் கொள்ளா விட்டால்…பின்னே… அவள் தான் ‘திருடி’ என்று குட்டு வெளிப்படும் சமயம்… இந் நற்பெயரை வைத்து… அவனிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது… திருட்டுப் பழியில் நின்றும் தப்பி விடலாமென்று எண்ணம் கொண்டாள் அவள்!!
ஆகையால்.. அவளது பாஸை அவள் பகைத்துக் கொள்ளக் கூடாது!! அது அவளது ஆரோக்கியத்துக்கு ஹானி விளைவிக்குமென்று தோன்ற..
அவனிழுத்த இழுப்புக்கெல்லாம்.. முகத்தை “சொய்ங்”என்று தொங்கப் போட்டுக் கொண்டே… அவனோடு விரைந்தாள்.. கேடி மதுராக்ஷி!!
ஆனால்… வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்??
அவனென்னமோ.. விஐபி பாக்ஸில்… வைத்து அவளுக்குப் படம் காட்டவா அழைத்துச் சென்றானென்றா… நினைத்து வைத்திருக்கிறீர்கள்??
எனில், உங்கள் கணக்கு தப்பு!!
அங்கே இருந்த மெத்து மெத்தென்ற சோபாவில்.. ஜம்மென்று.. காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டவன்.. தன்னை அவள் ஏமாற்றிய குற்றத்துக்காக.. தண்டனையும் தான் தர நாடினான்!!
படம் ஆரம்பிக்கும் போது… தலைவரின் என்ட்ரியை இவள் இரசித்துப் பார்க்க ஆயத்தமாக… கீழ் தளத்தில் இதர தோழிகளுடன் அமர்ந்திருந்த நிரோவோ.. விசிலடித்து.. பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பது இவளுக்கு மேலிருந்து பார்க்கும் போது புரிய.. நிரோவை எண்ணி ஏக்கமாகித் தான் போது!!
அவளோ.. கை, காலைக் கட்டிக் கொண்டு படத்தை ரோபோ போல நின்று கொண்டே படத்தைப் பார்க்க ஆயத்தமாக,
தன்னருகே வேலையாள் போல நின்றிருந்த அவளை நோக்கி,அஜய்யோ, “பாப் கார்ன் இல்லாமல் படம் பார்த்தா நல்லாவா இருக்கும்.. நீ என்ன பண்ற.. ரெண்டு பட்டர் பாப்கார்ன்.. ரெண்டு சில்லி பாப்கார்ன்… எடுத்து வந்துரு”என்று ஆரம்பித்தவன் தான்…
படம் போய்க் கொண்டிருந்த இரண்டரை மணி நேரமாக.. “கோக்கோ கோலா.. பெப்சி… கீழே விற்கும் அத்தனை நொறுக்குத் தீனிகளையும்..”என்று பட்டியல் நில்லாமல் ரயில் போல நீண்டு கொண்டே போக…. அன்று முழுவதும்… அவனுக்கு ‘ஸ்நாக்ஸ்’ சப்ளை செய்யும் ஆளாகத் தான் ஆகிப் போனாள் மதுரா!!
பிறகு எங்கே அவள் படம் பார்க்க!!
தியேட்டருக்கும், உணவுக் கவுன்டர்களுக்கும்.. மாடிப்படிகளிலிருந்து இறங்கி இறங்கி.. ஏறி ஏறி…ஹப்பா அன்று அவள் பட்ட துயர்! பெருந்துயர்!!
அவள் பொய் சொன்ன கால்வலியும், கைவலியும் கூடவே தலைவலியும் வந்தது தான் மிச்சம்!!
ஒரு கட்டத்தில்….. அவன் பக்கத்திலேயே சோபாவில் படம் பார்க்கக் கூட முடியாமல்… சோபா விளிம்பில் நீட்டப்பட்ட அவன் கையில்… தலைசாய்த்து குழந்தை குமரியாக அவள் உறங்கி விடவே…
உறங்கும் அவள் பால்முகம் கண்டு… பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. திரைப்படமும் தான் சுவாரஸ்யம் இழந்து போனது!!
ஏசி அறையில்.. மோட்டுவளையை அண்ணாந்து முகம் பார்க்க.. இதழ்கள் இலேசாகப் பிளந்திருக்க… தூங்கும் அவளைக் கண்டு.. அஜய்தேவ்வினுள் ஒழிந்திருந்த இரகசியக் காதலனும் தான் எட்டிப் பார்க்கலானான் மெல்லமாக!!
மெல்லிய திரை வெளிச்சமேயிருக்கும் இருட்டில்.. அந்த ஈர இதழ்கள் அவனைச் சுண்டியிழுக்க… அவனிடம் திருட்டுத்தனமும் தான் குடியேற… தானாய் இதழ்க் காந்தத்தை நோக்கி நகர்ந்தது இரும்பு!!
அவள் துயில் கலையா வண்ணம்.. செவ்வதரங்களில்… தன்னிதழ் பதித்து எடுத்தவனுக்கு… தூண்டியெழுப்பப்பட்ட.. காதலை விடவும்.. பெரிதாகிப் போனது காதலியின் தூக்கம்!!
இமைக்காமல்… அவள் கூந்தலை நெற்றி விட்டும் புறந்தள்ளிக் கொண்டே பார்த்திருந்தவனுக்கு.. அவளை தன் மஞ்சத்தில் வைத்து.. அழகு பார்த்திட துடித்தது இதயம்!!
அவனுக்கோ.. ஒண்டிக்கட்டையாகச் சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கையில்… தன் கட்டளையெல்லாம் ஏற்று சேவகம் செய்யும் அவளின் அருகாமை… அவன் மனத்தினை வெகுவாகக் கவர்ந்தது!!
எத்தனை மணிநேரம் தான் தன்னையுமறியாமல் தூங்கினாளோ… அவளது ஆழ்ந்த தூக்கத்தைக் கலைக்கும் வண்ணம்.. அவளுடைய செல் சிணுங்கி எழுந்து பார்த்த போது,
அங்கே அவனும் இல்லை! கீழ்த்தளத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த மாந்தர்களும் இல்லை!! இன்னும் ஏன்.. ஓடிக் கொண்டிருந்த படமும் இல்லை!!
தலையைப் பிடித்துக் கொண்டே பதறியடித்து எழுந்தவள், “அச்சச்சோ…”என்ற வண்ணம்.. அழைப்பையேற்ற போது.. அது அவளின் தோழி நிரோ என்பது புரிந்தது.
மறுமுனையில் அவளோ, “எங்கேடீ போன.. எவ்ளோ நேரமா தான் பார்க்கிங் ஏரியாவிலயே நிற்கறது..படம் பார்க்க தான் உள்ளே வரல.. இல்ல ஒருவேள சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு கிளம்பி போயிட்டீயா டீ”என்று இரைந்து தான் கத்தலானாள்.
நிரோவை விட்டால் வீடு செல்ல ஆளில்லை என்பது புரிய.. இதழ்க்கடையோரம் வழிந்த ஜொள்ளை துடைத்துக் கொண்டு, “இல்ல.. இல்ல நான் வீட்டுக்கு போகல.. இங்கே தான் இருக்கேன்.. இரு வரேன்”என்றபடி…. எழுந்து ஓடியவளுக்குள்ளோ ஒரு கேள்வி!!
உண்மையில் அவன் வந்தானா?? அவளோடு தான் படம் பார்த்தானா?? எனில், தூங்கியெழுந்ததும் அவனும் தானெங்கே??
அவன் சென்ற பின்னரும் கூட.. இதழோரம் மீசைக்குத்தியதால் விளைந்த.. குறுகுறுப்பு மட்டும் போகாமல்…. அவளைக் குத்தி குத்தி இம்சித்துக் கொண்டேயிருந்தது வெகுதூரம்!!
எனில், அது அவன் தந்த முத்தக் குறுகுறுப்பு என்று அவள் அறிவாளா??