12 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

12 – புயலோடு பூவுக்கென்ன மோகம் 

 

        

             ரூபேஷ் குளியலறை  கதவை பலமாக இடித்து கொண்டு இருந்தான்.நிகிதா கதவையே உடல் நடுங்க பார்த்து கொண்டு இருந்தாள். வாயோ வீரா மாமா .. வீரா மாமா.. என  ஜபம் போல  சொல்லி கொண்டு இருக்க… அறையின் கதவு படபடவென தட்டப்பட… 



“ஷீட்.. எவன் டா அது..” என வேகமாக சென்று கதவை திறக்க.. வீரா புயலாக உள்ளே வந்தான். ரூம் சர்வீஸாக இருக்கும் என நினைத்து கதவை திறந்தவன்.. வீராவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

உள்ளே வந்தவனின் விழிகள் ஒரு நொடி அறையை சுற்றி வர.. நிகிதா அங்கு இல்லை எனவும் அடித்து துவைத்து எடுத்துவிட்டான். 

 

முதலில் வீராவை எதிர்த்த ரூபேஷால் சிறிது நேரத்திற்கு மேல் தாக்குபிடிக்க.. முடியவில்லை. சொகுசான வாழ்க்கையினால் விளைந்த உடல்.. போதை என ..பலவீனமான உடல் ருபேஷ்.. உழைத்து உரம்பேறிய உடல் கொண்ட  வீராவின் அடியால்  சுருண்டு விழுந்தான்.



கீழே விழுந்த ரூபேஷை நிகிதா எங்கே என கேட்டு நாலு எத்து எத்த.. அவனால் வாயை திறந்து கூட  பேசமுடியவில்லை. குளியலறை  நோக்கி கை நீட்ட.. 

 

 

வீரா சென்று கதவை தட்ட.. மறுபடியும் கதவு தட்டப்பட.. பயத்தில் கதவை திறக்கவில்லை நிகிதா. வீரா கதவை தட்டியது.. ரூபேஷை அடித்தது.. அவன் அடி தாங்காமல் அலறியது எதுவும் அவள் உணரவில்லை. பயத்தில் உறைந்து போயிருந்தாள்.

 

“நிகிதா..நிகிதா.. கதவை திற..”என.வீராவின் குரல் கேட்கவும் தான் சுரணை வந்தது. படாரென கதவை திறந்து கொண்டு ஓடி வந்து வீராவை அணைத்து கொண்டு கதறி அழுதாள்.



நிகிதாவை பார்த்தும் ரூபேஷ் மேல் ஆத்திரம் இன்னும் அதிகமாகியது வீராவிற்கு… நிகிதாவின் தோள்பட்டடையில்  நககீறல்கள் அதில் இரத்தம் கசிய… கையை பிடித்து இழுத்ததில் கன்றி போய்.. அவளுடைய பால் நிற தேகத்தில் அவை எல்லாம் அதிக சிவப்புடன் தெரிய… அழுது கரைந்ததால் முகம் எல்லாம் கோவை பழமாக…

 

வீரா நிகிதாவை கை அணைப்பில் வைத்து கொண்டே அவனை மீண்டும் புரட்டி எடுத்தான். நிகிதா “மாமா…. போ..லாம்..” எனவும் தான் அவனை விட்டான்.

 

“உன் டாப்ஸ் எங்க..”என்றான்.

 

கட்டிலுக்கு பின்புறம் கைகாட்ட..அதை எடுத்து வந்து அவளை  போட வைத்து  அவளை அழைத்து கொண்டு வேகமாக வெளியேறினான்.

 

வீடு வரும் வரை இருவரிடமும் பேச்சில்லை. வீராவோ கோபத்தின் உச்சத்தில்… நிகிதாவோ தான் எந்த ஆபத்தும் இல்லாமல்  தப்பிவிட்டோம் என நம்பமுடியாமல்.. அச்சத்தில் கார் இருக்கையில் ஒடுங்கி போய் உட்கார்ந்து இருந்தாள். அவ்வாறு அவளை பார்க்க.. பார்க்க… அவள் மேல் கோபம் அதிகமானது.



வீடு வந்தும் இறங்காமல் இருந்தவளை..”நிகிதா.. இறங்கு..” என சத்தமிட.. தூக்கி வாரி போட.. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவளை கைபிடித்து உள்ளே  இழுத்து வந்தவன் பெரியவர்களை பார்த்ததும் நிதானமானான்.

 

“நீயே கூட்டிட்டு வந்துடட்டியா.. வீரா.. “என்ற தாத்தா.. நிகிதாவிடம் “போன் பண்ணியிருந்தா டிரைவரை அனுப்பி இருப்பேன்ல..”என்று சொன்னவர் அப்போது நிகிதாவை கவனித்தனர்.

 

“ஏய் நிகிதா.. என்னாச்சு” என்ற பாட்டியின் கேள்வியில் பேந்த பேந்த விழித்தாள். என்ன என்று சொல்வது..

 

“இல்ல எனக்கு போன் பண்ணினா.. நான் போவதற்குள்.. ஹோட்டலில் இருந்து வெளியே வந்து எனக்காக காத்திருக்கும் போது ஒரு தெரு நாய் கடிக்க

 வந்திருக்கு..பயந்து ஓடி வரும் போது கீழ விழுந்திட்டா..” என்று ஏதோ கூறி சமாளித்தான். 

 

பெரியவர்களுக்கு தெரிந்தால் தாங்கமாட்டார்கள் பாவம் என மறைத்துவிட்டான்.

 

“எதுக்கு வெளிய எல்லாம் வந்து நிக்கற.. காலம் கெட்டு கிடக்கு..வீராவ வந்துட்டு கால் பண்ண சொல்லி இருக்கலாம்ல..”என்ற பாட்டியிடம்..

 

“அம்மாச்சி அவளே பயந்து போய் இருக்கா..”

 

“விடு மங்களா.. காலைல பேசிக்கலாம்.சரி போய் படுங்க..”என்றார் தாத்தா.

 

அவளை மறுபடியும் இழுத்து கொண்டு அறைக்கு வந்தவன்.. வந்த வேகத்தில் அவளை அங்கிருந்த சோபாவில் தள்ளினான்.

 

“இந்த சகவாசத்த எல்லாம் விட்டு ஒழினு சொன்னேன்ல.. கேட்டியா.. இப்ப என்னாச்சு பார்த்தியா..” என்று சீறி கொண்டு அடிக்க கையை ஓங்கி கொண்டு வர…

 

அவனின் கோபத்தில் இன்னும் பயந்து நடுங்கி போய்.. அவன் அடிக்கும் முன் அவன் கையை பிடித்துக்கொண்டு..

 

“இல்ல மாமா… அந்த ரூபேஷ் தான் ப்ரண்ட்ஸ எல்லாம் மறந்துட்டியானு கேட்டு அதை இதையும் சொல்லி.. நான் கில்டியா பீல் பண்ற மாதிரி பேசினான். ப்ரண்ட்ஸ பார்த்தும் ரொம்ப நாளாச்சுனு தான் போனேன்”



“பட்.. அவன் இப்படி செய்வான்னு நான் நினைக்கல..”

 

“சரி….  அவனோட ஹோட்டல் ரூம் வரைக்கும் எப்படி போன..” என கேட்க…

 

தன்னை சந்தேகப்படறானோ என கவலை கொண்டவள்.. மறுப்பாக தலை அசைத்தவாறு..

 

தயக்கத்துடன்..”என்னை ட்ரிங்ஸ் எடுத்துக்க சொன்னான்.” அவனின் கோபப்பார்வை கண்டு பேச்சு தடை  பட…எச்சில் கூட்டி விழுங்கினாள்.  ..

 

பின் அவசரமாக …”இல்ல நான் எடுத்துக்கல.. அவன் போர்ஷ் பண்ணினான் தான்” என நடந்த அனைத்தையும் சொன்னாள்.  ஹோட்டல் அறையில் ரூபேஷ்  நடந்து கொண்டதை சொல்ல முடியாமல் அழுகை வர திக்கி திணறி ஒருவாறு சொல்லி முடித்தவள்  அவனை அணைத்து கொண்டு கதறினாள்

 

 இவளின் நண்பர்களால் தான் இவளுக்கு இந்த கெட்ட பழக்கம்.. அதனால் வீட்டினர் எடுத்த  நடவடிக்கை…தங்கள் வாழ்க்கை சிக்கலானது என்று வீராவுக்கு கோபம் வந்த  போதும்…

 

அவள் கதறுவதை பார்த்தவனுக்கு மனது வலிக்கவே செய்தது.என்ன இருந்தாலும் ரத்த உறவல்லவா.. சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவள்…



தன்னை போலவே அவன் கைகள் அவளை அணைத்திருந்தன. தேம்பி தேம்பி அழுபவளிடம் கோபத்தை காட்ட மனம் வராமல் ஆறுதல் படுத்தினான்.

 

“நிகிதா.. சொல்றத கேளு.. அழுகாத..”என்றவன் அவளை அழைத்து வந்து படுக்க வைத்து விட்டு  பார்மல் டிரஸ்ஸில் இருந்தவன் ப்ராஷாகி வரலாம் என செல்ல… கையை பிடித்து நிறுத்தினாள்.

 

“என்னடி..” என்றான் திரும்பி பார்த்து..

 

“எனக்கு பயமா இருக்கு..என் கூடவே இருங்க மாமா..”

 

“ப்ராஷாகிட்டு வரேன் இரு”கையை விடுவித்து கொண்டு சென்றவன்  சில நிமிடங்களில் வழக்கமான இரவு உடையில் வந்து படுத்தான். 

 

நிகிதா உடலை குறுக்கி கொண்டு உடல் நடுங்க  விசும்பியபடியே இருக்க..  பார்த்திருந்த வீராவுக்கு மனம் தாளவில்லை.  தன் மாமனின் செல்லமகள். அவனுக்கு தெரிந்து இவள் இப்படி அழுது பார்த்ததில்லை. அவளின் அருகே நகர்ந்து நெருங்கி படுத்தவன் அவளை அள்ளி தன் மேல் போட்டு கொண்டான்.  வஜ்ரம் பாய்ந்த தேக்கு போன்ற அவனுடைய  அகன்ற.. வாட்ட சாட்டமான உடம்பில் அவள் ஒடிசலான.. பூவையான தேகம் அல்லி கொடி போல படர்ந்திருந்தது.

 

அவன் அள்ளி தன் மேல் போட்டு கொண்டதும் அவனின் மார்ப்புக்கு மத்தியில் அழுத்தமாக முகம் புதைத்து மேலும் விசும்ப… அவனோ அவள் முதுகை நீவி ஆறுதல் படுத்த முனைய.. அவனின் ஆறுதல் போதாது என்னும் விதமாக அவன் கழுத்தை கட்டி கொண்டு இறுக்கி அணைத்தாள். அவனோ  மல்லாக்க படுத்து இருக்க.. அவனின் நேர் மேலே கவிழ்ந்து படுத்து இருந்தவளின் அணைப்பு அவனை தடுமாற வைக்க… 

 

“நிகிதா.. ப்ளீஸ்…” என்றான் கெஞ்சுதலாக..

 

முடியாது எனும் விதமாக தலையாட்டி அவனுடைய கை இல்லாத டீசர்டை மேலே சுருட்டி  விட்டு.. அவளுக்கு மிகவும் பிடித்த அவனுடைய மார்பு ரோமங்களை முகம் கொண்டு உரச..  “என் வீரா மாமா..  என் வீரா மாமா…” என புலம்ப… ஒரோர் வீரா மாமாவிற்கும் மார்பில் ஒரு செல்லகடி கடிக்க… கண் திறக்காத நாய் குட்டியாக அவன் மார்ப்பில் முட்டி மோதினாள். அவன் மார்ப்பே அவள் காதல் ஆட்சி செய்யும் இடமானது. அவனின் அவஸ்தையின் அளவு ஜெட் வேகத்தில் எகிறியது. இனி அவளை தீண்டாமல் முடியாது என்னும் நிலையில் அவன்.. உண்மையில் அந்த நேரத்தில் அவளுக்கும் அவனின் சாதாரண  அணைப்பு.. ஆறுதல் வார்த்தைகள்.. பற்றவில்லை.அதற்கு மீறிய  நெருக்கத்தை  ஆறுதலுக்காக தேடினாள்.

 

அவளிடம் இருந்து தப்பிக்கும் மார்க்கமாக..

 

“நீ போய் நைட் டிரஸ் போட்டு வந்து படு.. ஜீன்ஸோடு படுக்காத.. போ..” என தன்னிடம் இருந்து விலக்க பார்க்க…

 

அவள் நகரவில்லை. அவனின் வார்த்தைகளுக்கு அவளின் மறுப்புகள் எல்லாம் மௌனமொழியாகவே இருக்க…அவளை தன்னில் இருந்து பிரிக்க பார்க்க.. இன்னும் இன்னும் பசையாக ஒட்டினாள்.

 

அவனின் நிலையோ  மிக மோசம்.. பேரலையாக எழும்பும்  உணர்வுகளை தன்னுள் அடக்க.. அடக்க.. நீரில் அழுந்த மறுக்கும் பந்து போல எதிர் விசையில் எகிறி கொண்டு மேலே கிளம்பியது. 



அவளின் தேவையை உணர்ந்தவனுக்கு அதை பூர்த்தி செய்ய.. ஆசை கிளர்ந்த போதும்…அவனின் வரட்டு பிடிவாதமும்..  அவன் நினைத்து கொண்டு இருக்கும் பொருந்தாத வாழ்க்கை என்ற எண்ணமும் தடையாக வந்து நின்றன.

 

இரு மனங்கள் கூடிய சங்கமம் என்பது எந்த ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறியும் என்ற நியதியை அறியாமல் அழகாக.. அன்பாக. ஆளவேண்டியவளை தள்ளி நிறுத்தப் பார்க்க.. அவன் தடைகள் எல்லாம் உடைப்பெடுக்கும் நிலையை உருவாக்கி கொண்டு இருந்தாள்.

 

அவன் மார்ப்பை சுற்றி சுற்றி விடாது  முத்தம் கொடுத்து கொண்டு இருந்தாள் நங்கை. அவன் பாதத்தின் மேல் தன் பாதத்தை வைத்து…அவன் தோள்களில் தன் கைகளை ஊன்றி.. எக்கி எழுந்து..  அவனின் இதழை தன் இதழால் இடமிருந்து வலமும் வலமிருந்து இடமும் மாற்றி மாற்றி உரசி உரசியே சிக்கிமுக்கி கல்லாக அவனுள் காதல் தீயை பற்ற வைத்தாள்.

 

அவனின் பிடிவாதங்களை எல்லாம் அவளின் பிடித்தம் ஜெயிக்க.. சிறு சிறு  அலையாக எழுந்த மோகங்கள் எல்லாம்  ஆழி பேரலையாக எழுச்சி பெற…



தன் மேல் கிடந்தவளை புரட்டி கீழே போட்டு.. அவள் மேல் இவன் படர… நிகிதாவின் நயனங்களில் காதல் மின்ன.. மென்னகை பூக்க.. நம்ப முடியாமல் “மாமா” எதிர்பார்ப்போடு கணவனை பார்க்க…

 

“சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டல்ல.. இனி வரும் சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை.. பார்த்துக்கோ..” என்றான் குறும்பு புன்னைகையுடன்..

 

“ம்ம்ம்.. ஹாஹாங்.. அதையும் பார்க்கலாம்”என்று  அவனை மேலும் உசுப்பேத்தி விட..

 

“உன் கொழுப்பை எல்லாம் இன்னைக்கு அடக்கறேன்டி” என்றான் உல்லாசமாக..

 

“வீராச்சாமி மச்சானுக்கு ஒருவழியாக வீரம் வந்துடுச்சு போல..” என்றாள் உதட்டை சுழித்து நக்கலாக..

 

அவளின் பேச்சின் நோக்கம்அறிந்தவனுக்கு  மனதை மயிலிறாக வருட..

 

“திமிரா பேசற இந்த வாயை..” என்றவன் அவள் இதழ்களை இழுத்து கவ்வி சுவைக்க..

 

இதழ் சிந்தும் தேனை பருக… பருக..வயாகாரா ஜீஸ் குடித்தது போல கிறங்கி போனான்.

 

அடுத்து அவளை ஆவேசமாக ஆலிங்கனம் செய்தான். அன்று போதையில் அரங்கேறியது வீராவுக்கு எதுவும் நினைவில் இல்லை. இன்று சுய நினைவோடு தன் இல்லாளின் பேரழகை காண…  இப்போது மது அருந்தாமலேயே போதை தலைக்கு ஏற… கிறுகிறுத்து போக…

 

அவன் ஆவேசமாகவே காதல் போர் தொடுக்க… எதிர்கொள்ள முடியாமல் திணறினாள். அவள் திணறும் போது எல்லாம் தலை கோதி.. முத்தம் வைத்து.. 

 

“அமுல் பேபி..அமுல் பேபி..” என கொஞ்ச.. 

 

“மாமா.. வீரா மாமா..”என கிள்ளையாக மிழற்ற…

 

இருவருக்குமே வாழ்நாளின் வசந்தமாக.. நிறைவான கூடலாக.. அரங்கேறியது.

 

அவன் காதலை அவன் உணர்ந்தானோ இல்லையோ.. நிகிதா உணர்ந்தாள். உணர வைத்து இருந்தான் நிகிதாவின் ஒவ்வொரு அணுவிலும் பதியுமாறு…

 

காதல் போதை தெளிய.. தெளிய.. மீண்டும் மீண்டும் மனைவியை நாடினான். வேண்டாம் என ஒதுங்கியவன் தான் இன்று வேண்டும்.. வேண்டும் என அடம்பிடித்து தனக்கு தேவையானதை நடத்தி கொண்டான்.

 

ஒரு கட்டத்தில் நிகிதா சோர்ந்து மயங்கும் நிலைக்கு வரவும் தான் விடுவித்தான். ரூபேஷினால் ஏற்பட்ட அதிர்ச்சி.. இரவு உணவு எடுத்து கொள்ளாதது.. வீராவின் ஆவேசமான ஆலிங்கனம்.. எல்லாம்  அவளுக்கு லேசான மயக்கம் ஏற்பட..

 

தங்கள் அறையில்  மினி ப்ரிட்ஜில் இருந்த ஜீஸை எடுத்து வந்து அவளுக்கு புகட்டி.. அவனும் சாப்பிடவில்லையே.. இப்போது தான் பசி தெரிய.. தானும் கொஞ்சம் குடித்துவிட்டு.. அவளை தன் மேல் சாய்த்து தட்டி கொடுத்து தூங்க வைத்து.. தானும் தூங்கி போனான்.



மையல் கொண்டு நங்கை பேதலிக்க..

 

மோகம் கொண்ட நாயகன் கிறங்க..

 

மன்மத தேசத்தில்..மயங்கும் பொழுதில்..

 

காதல் மழையில் நனைந்து…

 

மோக கடலில் மூழ்கி…

 

தாப அலை அடித்து செல்ல..

 

தீராத தாகம் தணிய… தணிந்து

 

உருகி கரைந்து போயினர்..