5 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
5 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
வீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தான். விருப்பம் இல்லாமல் வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட வாழ்க்கை. தொழிலும் அவ்வாறே.. அவன் படிப்பிற்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாத தொழில். அதன் அரிச்சுவடி புரியவே அவனுக்கு நாட்கள் எடுத்தது.
இருந்த போதிலும் முயன்று ஈடுபாட்டோடே கற்று கொள்ள முயன்றான். இதுவே அவனுக்கு ஒரு மன அழுத்தத்தை கொடுத்திருக்க…இன்று நடந்த குளறுபடியால் ஏகப்பட்ட டென்ஷன்.
அவனின் மனநிலை புரியாமல் நிகிதா அவனுக்காக காத்திருந்தாள். வீடு வந்து சேர்ந்தவனை அமைதியான யாருமற்ற வரேவேற்பறையே வரவேற்றது.
அந்த வீட்டில் உள்ளவர்கள் தனித்தீவு போல தான் வாழ்ந்தார்கள். எப்பவும் இவனுக்காக பாட்டி காத்திருந்து இவன் வந்து சாப்பிடும் வரை கூட இருந்து கவனிப்பார் தான் ஆனால் இன்று அவன் வழக்கத்தை விட அதிக நேரம் கடந்து வந்திருக்க…
பாட்டியும் வயதின் தள்ளாமை மாத்திரையின் உபயோகம் என உறங்க சென்றிட.. தனியே உணவு உண்ணும் நிலை.
பரிமாற வந்த வேலைக்காரர்களை வேண்டாம் என சொல்லி விட்டு தானே எடுத்து வைத்து சாப்பிட்டான்.
ஊரில் என்றால் அவன் அம்மா அருகில் இருந்து அவன் பசியறிந்து பரிமாறுவார். வேலைக்காக சென்னை வந்த பிறகு வீராவும் அவன் நண்பர்கள் என நான்கு பேர் சேர்ந்து வீடு எடுத்து தங்கியிருந்தனர். முடிந்தால் சமைத்து உண்பர். இல்லை என்றால் வெளியே வாங்கி கொள்வர்.
ஆனால் சமைத்ததோ பார்சல் உணவோ நைட் ஷிப்ட் செல்பவர்களை தவிர மற்றவர்கள் இரவு நேரங்களில் விடுமுறை நாட்களில் கேலியும் கலாட்டாவுமாக பேசிக் கொண்டே சாப்பிடுவர்.
அப்படி இருந்தவனுக்கு இந்த சூழ்நிலை ஒவ்வாமை தான். இந்த ஒவ்வாமை மனதில் ஒரு வெறுமை என அன்று வீரா கொஞ்சம் எரிச்சல் கொஞ்சம் சலிப்பு என அவன் மனம் சற்று நிலை பிறழ்ந்து தான் இருந்தது.
அவன் அறைக்கு வந்து உடை மாற்றி குளியலறை சென்று வரும் வரை சோபாவில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டே எப்படி ஆரம்ப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தவள் அவன் படுக்க செல்லவும்…
மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து வந்தவள் அவனை பார்த்தப்படியே டீப்பாய் மேலே வைத்தாள். அவள் என்னமோ செய்கிறாள் என அவளை சட்டை செய்யாமல் படுக்க சென்றவன் பாட்டிலை பார்த்ததும் அதிர்ந்து விட்டான்.
அவன் பார்க்கும் போதே பாட்டிலை திறந்து கண்ணாடி டம்ளரில் உற்ற… வீராவிற்கோ மேலும் அதிர்ச்சி.
நிகிதா குடிப்பாள் என்று தெரியும். அதுவும் எப்போவதாவது நண்பர்களின் வற்புறுத்தலில் இரண்டு மூன்று தடவை அவ்வளவே..
வீட்டிலேயே இவ்வாறு அதுவும் கல்யாணத்திற்கு பின்பும் செய்வாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.
அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்தவாறே அவள் எடுத்து குடிக்க… வேகமாக அவளிடம் வந்தவன்
“என்னடி பண்ணிட்டு இருக்க..”
“பார்த்தா தெரியலையா.. ட்ரிங் பண்றேன்”
“வீட்ல வச்சு குடிக்கிறது இல்லாம… அதை என்கிட்டயே சொல்லற.. என்ன தைரியமடி உனக்கு” என்று கோபமாக பேச..
அவனை கோபப்படுத்தி குடிக்க வைக்க வேண்டும். அவனை தாத்தா பாட்டியிடம் காட்டி பெரிய பேரன்… ஒழுக்கசீலன்… என சொன்னிங்கல்ல பாருங்க…. அந்த நல்லவனை.. என அவன் மதிப்பை கெடுக்க வேண்டும் என எண்ணி செய்து கொண்டு இருந்தாள்.
“குடிப்பேனு தெரிஞ்சு தான கட்டிகிட்ட.. அப்புறம் என்னமோ புதுசா அதிர்ச்சியாகி கத்தற..” என்று எடுத்தெறிந்து பேசினாள்.
பேசியதோடு அல்லாமல் டம்ளரில் உள்ளவற்றை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.
“சொல்லிகிட்டே இருக்கேன்.. குடிக்கிற.. உன்னைய..”என அடிக்க கை ஓங்க..
அவன் முன்னால் திமிறி கொண்டு நின்றவாறே..
“அடிப்பியா.. எங்க அடி.. அடி பார்க்கலாம்” என்க…
“ச்சை உன்னைய அடிச்சா எனக்கு தான் அசிங்கம்”என்றான் முகத்தில் அருவருப்புடன்..
இதுவரை அவளை யாரும் அப்படி சொன்னதோ.. பார்த்ததோ இல்லை வீட்டிலும்… நண்பர்களும் அவளை கொண்டாடி தான் பார்த்திருக்கிறாள்.அதில் மேலும் கோபம் கொண்டவள்
“நான் அசிங்கமா உனக்கு..நீ பெரிய ஆணழகனா.. ரொம்ப நல்லவனா.. நீயும் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தியோ… யாருக்கு தெரியும். நல்லவன் மாதிரி நடிச்சு எல்லோரையும் நம்ப வச்சு ஏமாத்திட்ட..” என்றாள் ஏளனமாக…
அவளின் ஏளனகுரலில் கோபத்தின் உச்சிக்கே சென்றவன்
“ஆமாண்டி நான் ஆணழகன் இல்லை தான் ஆனால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்லவன்டி.. நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழனும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா..போயும் போய் உன்னைய என் தலைல கட்டி வச்சிட்டாங்க..”
எப்படிபட்ட மனைவி.. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ ஆசை கொண்டான் என சொல்ல.. சொல்ல.. நிகிதாவின் கர்வம் திமிர் எல்லாம் அடி வாங்கியது.
“கடைசியில் என் வாழ்க்கை உன்னோடனு சேர்த்து வச்சிட்டாங்க.. எல்லாம் என் தலையெழுத்து” என்றான் வேதனையான குரலில்
எல்லோரும் கொண்டாடும் தன்னை ஒருவன் தலையெழுத்தே என சகிப்பதா..என ஆத்திரம் கொண்டவள்.
மேலும் அவனை உதாசீனப் படுத்தி பேச.. இவன் பதிலுக்கு அவளிடம் மல்லுக்கட்ட…சண்டை வளர்ந்து கொண்டே சென்றது..
ஏற்கனவே ஒரு வித மன அழுத்தத்தில் வந்தவனிடம் நிகிதா பெரிய சண்டையை செய்ய.. மன அழுத்தம் அதிமாகி.. தன்நிலை மறந்து.. தன் குணத்தில் இருந்து தடுமாறி.. தன் பழக்கத்தில் இருந்து தடம் புரண்டு.. எதிரில் இருந்த பாட்டிலை எடுத்து மொத்தமாக வாயில் சரித்தான்.
நிகிதாவோ ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள். அடப்பாவி என்னைய குடிகாரினு சொல்லிட்டு இவன் பெரிய இவனாட்டம் பேசினான். இப்ப என்னடானா.. மொத்தமா வாயில் ஊத்திக்கிட்டானே.. என அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.
குடித்து முடித்தவன் பாட்டிலை வேகமாக டீப்பாய் மேல் வைத்தவன்.. சோபாவில் தொப்பென அமர்ந்து தலை மேல் கை வைத்து..
“நானூ..உ..உ.. எப்படீடீ…பட்டவனு.. தெரியுமா… இந்த கருமத்தை. …ஐஐஐ….எல்லாம் மோந்தூ கூட பார்த்ததில்ல… எல்லாம் சகவாச… தோஷம்… உன்னோட சேர்ந்தூ.. நானும் குடிகாரனா…ஆகிட்டேன்”என மேலும் மேலும் ஏதேதோ அழுகையான குரலில் புலம்ப…
நிகிதாவும் குடித்திருந்ததால் லேசான மயக்கத்தில் இருந்தவள் அவன் புலம்பவும் மனது கேளாமல் அவனருகே அமர்ந்து..
“அழுகாத.. வீரா..” என அவன் கையை பிடித்துக்கொண்டு சொல்ல..
“போடி…அழுகாத.. னு.. சொல்ற… இங்க…இங்க… வலிக்குதடீடீ… ரொம்ப…”என தனது நெஞ்சை தொட்டு காட்ட…
“இரு நான் உனக்கு அங்க முத்தா.. வைக்கறேன்.. முத்தா வைச்சா.. வலி.. எல்லாம்.. பறந்து போயிடும்” என கையை விரித்து பறந்து போவது போல சைகை செய்ய…
“ம்ம்ம்… அப்படியா… சொல்ற… அப்ப… முத்தா …வை..”
அரை மயக்கத்தில் நிகிதாவும் முழு போதையில் வீராவும் சுய நினைவின்றி இரண்டும் பிதற்றி கொண்டு இருந்தன.
வீராவின் அருகே நெருங்கி அமர்ந்து தன் மொத்த உடலையும் அவன் மேலே உரசியவாறு.. அவன் போட்டு இருந்த உள் பனியன் மேலேயே முத்தம் கொடுக்க…
“இப்ப சரியா போச்சா…வலி எல்லாம் போச்சா..” என அவன் முகம் பார்த்து கேட்க…
சிறு குழந்தையாக உதட்டை பிதுக்கி கொண்டு “நீயி… பொய் சொல்லற… என்ன..ஆ…ஏமாத்தற…”
“இல்ல…நா.. கொடுத்தே…இரு..மறுபடியும் தரேன்..” என அவனை இன்னும் நெருங்கி முத்தம் கொடுக்க போனவள் தாடையில் தன் ஆள்காட்டி விரலால் தட்டி யோசித்தவாறே…
“வீரா..ரா..இந்த பனியன கழட்டிடூ…இது மேல கொடுத்தேனா ஆ.. அதான் உனக்கு ஒன்னுமே தெரியல..”
“ஆங்..அப்படியா..சொல்ற..”என சாதுவாக அவன் கேட்க.. ஆமாம் என இவளும் அப்பாவியாக தலையை ஆட்ட..
பரபரவென பனியனை கழட்டி எறிந்தான்.
“இப்ப.. கொடு..”
நிகிதா கண்களை சுருக்கி உதட்டை குவித்து அவன் நெஞ்சில் அழுத்தமான முத்தம் ஒன்று வைக்க….
அந்த முத்தத்தின் குளிர்ச்சி அவன் நெஞ்சில் இருந்து உடல் முழுவதும் பரவி அவன் உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது.
“ம்ஹா..” கண்மூடி அதை அனுபவித்தான். அவனின் செய்கை இவளை மேலும் தூண்டிவிட.. அவன் நெஞ்சமெங்கும் குட்டி முத்தங்கள் வைத்தாள்.
வீரா குடும்பத்திற்கு கட்டுப்பட்டவன். இது வரை எந்த பெண்ணையும் காதல் என்ற பார்வையில் பார்த்ததில்லை.. விடலை பருவத்தில் பெண்களை சைட் அடித்திருக்கிறான். ஆனால் தனது தந்தையின் உழைப்பை பார்த்து வளர்ந்தவன் சிறு வயதில் இருந்தே பொறுப்பானவன் தான்.
எனவே தனது கல்யாணம் பெற்றவர்கள் பொறுப்பு என சுயக்கட்டுப்பாடோடு இருந்தவன் அதனால் தான் பிடிக்காமல் போனாலும் பெற்றவர்கள் தேர்வு நிகிதா எனவும் மறு பேச்சின்றி தாலி கட்டினான்.
இன்று அவளின் முத்தம்… அவன் வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண்ணின் முத்தம்… அவனின் காதல் உணர்வுகளை தட்டி எழுப்ப…
அந்த முத்தம் தன் உடலெங்கும் வேண்டும் என்ற வேட்கையை தூண்ட.. அவளை காதல் மிகுந்த ஏக்கப் பார்வையோடு பார்த்தவன்.. இங்கு இங்கு என நெஞ்சில் இருந்து மேல் நோக்கி கழுத்து கன்னம் என தன் சுட்டுவிரல் கொண்டு தொட்டு காண்பிக்க…
நிகிதாவிற்கும் ஆண் நண்பர்கள் உண்டு தான். அவளுக்கு நட்பில் ஆண் பெண் பேதம் கிடையாது.எல்லோரிடமும் விகல்பமில்லாமல் தான் பழகுவாள்.
வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடிய பொழுது அமைந்த நண்பர்கள் அவர்கள். எல்லாம் மேல் வர்க்க பிள்ளைகள். அவர்களை பொறுத்தவரை குடிப்பது தவறில்லை. சிறு வயதிலேயே வீட்டில் பார்ட்டிகளில் பார்த்து வளர்ந்தவர்கள். அவர்களின் போதனைகள் தான் நிகிதாவின் இந்த பழக்கம். இது வரைக்கும் அவளுக்கும் காதல் உணர்வுகள் யாரிடமும் தோன்றியதில்லை.
வீரா தன் சுட்டுவிரலால் ஒவ்வொரு இடமாக கழுத்து கன்னம் என சுட்டிக் காட்ட.. அவள் குட்டி குட்டி ஐஸ் முத்தங்களை வைக்க.. ஒவ்வொரு முத்தத்திற்கும் ஹா.. என தலையை உயர்த்தி சிலிர்த்து அடங்கினான். முத்தத்திற்கே இப்படியாடா.. மொத்தமும் அவள் கொடுத்தால்.. என்னாவியோ….
இறுதியாக அவனின் உதட்டில் தட்ட.. ஒரு நொடி யோசித்தாள். மறு நொடி அவன் உதட்டில் ஒரு சில் முத்தத்தை வைத்து விலக… விலக எத்தனித்த… நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் இதழை தன் இதழால் மடக்கி இழுத்து சுவைக்க… அவன் பருகிய பழ ரசத்தால் உண்டான போதையை விட இவளின் இதழ் ரசம் தந்த போதை அவனின் உச்சி மண்டை வரை சுரீரென கிறு கிறுக்க வைக்க..
அடுத்து முத்தத்தை எல்லாம் அவன் கைவசமாக்கி கொண்டான். அவள் நெஞ்சில் இருந்து உதடு வரை கொடுத்ததை … இவன் உதட்டிலிருந்து கீழ் நோக்கி முத்த தடம் பதிக்க… நிகிதாவிற்கும் ஒரு பரவச உணர்வு ..அவளுக்கு இந்த புது வித உணர்வு பிடித்திருக்க…அவனோட ஆன நெருக்கத்தை இன்னும் அதிகப் படுத்தினாள்.
இருவரும் ஏப்பொழுது சோபாவில் இருந்து படுக்கைக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று அவர்களே அறியவில்லை.
இருவருமே சுய நினைவில் இல்லை. அவர்களை அறியாமல் உள்ளத்தால் அன்றி உடலால் நெருங்கியவர்கள் மேற் கொண்டு என்ன செய்ய போகிறார்கள்…?