23 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
23 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
நிகிதா தன் தந்தை ஏதாவது செய்யலாம் என சொன்னதை நம்பி சும்மா இருக்கவில்லை. காஞ்சிபுரம் சுற்றிலும் தனக்கான பேக்டரியை தேடி தேடி அலைந்தாள். மசக்கை ஒரு புறம் அவளை வாட்டினாலும் மனதின் வைராக்கியம் கொண்டு அதை புறம் தள்ளினாள்.
அவள் எதிர்பார்த்தது ரொம்ப பழைய பேக்டரியாக இருக்ககூடாது. மெஷினரீஸ் பழைய மாடலாகவோ.. இப்பவோ அப்பவோ பழுதாகிவிடும் நிலையிலோ இல்லாமல்.. கொஞ்சம் புதிதாக இம்போர்ட் மெஷினரீஸ் உள்ளதாக இருந்தால் உடனே ரன் செய்ய வசதியாக இருக்கும் என நினைத்து தேடினாள்.
அவளுக்கு அதை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை தான் ஆனால் படித்தவள் தானே நெட்ல நிறைய தேடி தெரிந்து கொண்டாள். தந்தையிடமும் சில மாதங்கள் என்றாலும் பேக்டரியில் வேலை செய்திருந்ததால் வீராவிடமும் சிலதை கேட்டு தெரிந்து கொண்டாள்.
“எப்ப பாரு இதே பேச்சு தானாடி..கடல் கடந்து மாமன் இருக்கானே.. அவன கொஞ்சம் கவனிப்போம்னு நினைக்கறியாடி..”
“நான் ஏன்யா உன்னை கவனிக்கனும்.. உனக்கு தான் கல்யா..ஆஆஆ..ணி இருக்காளே.. கருத்த மச்சானு மினுக்கிக்கிட்டு வருவா..”
“ஏண்டி.. இப்ப எல்லாம் அவள பத்தி நினைக்கறது கூட இல்ல.. நீ தான் சொல்லி ஞாபகம் படுத்தற..”
“ஓஓஓ.. நான் சொன்னா நீங்க நினைப்பிங்களோ..”
“எப்படிடீ .. எந்த பக்கம் போனாலும் விடாம அடிக்கற.. மாமன் பாவம்டி.. என் நினைப்புல உன்னை தவிர யாரும் இல்ல..நான் ஶ்ரீராமன்டி..”
“ம்கூம்.. அப்ப கல்யாணி யாரு.. தங்கச்சியா…”
பேசாமல் இருந்தான். அவனால் கல்யாணி தங்கையாக நினைக்க முடியவில்லை. அவளுடைய கருத்த மச்சான்ற அழைப்பு நினைக்க விடவில்லை. அவனை பொறுத்தவரை தன் மன கஷ்டங்களுக்கு வடிகாலாய் வந்த வரம்பு மீறாத பெண் நட்பு அவ்வளவு தான். அவள் பேச்சை மனதால் ரசித்தான் தான். ரசனை மட்டுமே..அதை அவளிடம் காட்டி கொண்டால் எங்கே உரிமை எடுத்து கொண்டு எல்லை மீறுவாளோ.. என்று காட்டி கொண்டதில்லை. அந்த ரசனை மட்டுமே அவனின் மனதிற்கு மருந்தாக இருந்தது.
“என்ன.. அமைதியா இருக்கிங்க.. அவ சொன்ன மாதிரி லிவ்ன்ல தான் இருக்கறிங்களா..” என்றாள் கோபமாக..
“அம்மா தாயே.. உன் கால்ல வேணாலும் விழுகறேன்.. நான் அவளை நேருக்கு நேர் பார்த்ததில்ல.. சொன்னா நம்புடி..”என்றான் கெஞ்சலாக..
“சரி.. சரி.. அத விடுங்க..”
அப்பாடி என நிம்மதியாக ஆசுவாசமாக.. அடுத்த கேள்வி கேட்டாள்.
“எப்ப வருவிங்க.. வருவிங்களா.. இல்ல அங்கயே இருந்துக்குவிங்களா.. “
“ஏண்டி… “என்றான் பாவமாக..
“என்ன பதில் சொல்லுங்க..”
“சீக்கிரம் வந்துடுவேன்டி…”
“என்னய பார்க்கவா.. உங்க புள்ளய பார்க்கவா.. யார பார்க்க வருவிங்க…”
“இரண்டு பேரையும் தான்..”
“நானா… உங்க குழந்தையா..”
“அது என்ன என் குழந்தை.. நம்ம குழந்தை..”
“ம்ப்ச்.. நான் கேடடதுக்கு பதில்..”
“உன் கேள்வியே புரியல.. நான் வந்தா இரண்டு பேரையும் தான பார்க்க வருவேன்..”
“இல்ல.. கீரேனீகிட்ட சொன்னிங்களாம்.. கன்சீவ்வா இருக்கேன் தெரிஞ்சிருந்தா.. இங்கயே இருந்து இருப்பேன்னு சொன்னிங்களாம்”
“ஆமாம் சொன்னேன்.. கண்டிப்பா போயிருக்கமாட்டேன்..”
“அப்ப பேபி மேல தான் பாசம்..”
“அப்படி இல்லடி.. அமுல் பேபி..”
“அப்படி தான்.. இப்பவும் உங்க பேபிக்காக தான் திரும்ப வர பார்க்கறிங்க..அதனால தான் கேட்டேன். என்னய பார்க்கவா.. பேபிய பார்க்க வரிங்களானு கேட்டேன்”
ஐயோ கல்யாணமானவன் பூரா ஏன் மந்திரிச்சு விட்ட கோழி மாறியே சுத்தறானுங்கனு இப்ப தானே புரியுது…வீராவின் மைண்ட் வாய்ஸ்
“சத்தியமா புரியல.. நீ என்ன நினைக்கறியோ.. அத தெளிவா சொல்லு..”
“நீங்க டெலிவரிக்கு முன்னாடி வந்தா என்னைய பார்க்க.. டெலிவரிக்கு அப்புறம் வந்தா உங்க பேபி மேல தான் உங்களுக்கு அஃபெக்க்ஷன்.. என் மேல இல்லை..”
“ஏய்.. நிகிதா.. அப்படி எல்லாம் இல்லடி..”
“சொல்லாதிங்க.. செய்ங்க..” என கட் பண்ணிவிட்டாள்.
எப்படி எல்லாம் யோசித்து வளைச்சு வளைச்சு கேட்கறா.. அதான் பொண்டாட்டி போன் வந்தா எல்லா பயலுகளும் அலறானுங்களா.. ஷ்ஷப்பா.. என டயர்டாகி தூங்கிவிட்டான்.
அவள் நினைத்தது போலவே ஒரு பேக்டரி அமைந்தது. நான்கு பார்ட்னர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்குள் சுமுகமான நிலை நீடிக்காததால் விற்று அவர்கள் பங்கை எடுத்து கொள்ளும் நிலையில் இருக்க.. தெரிந்தவுடன் தன் தந்தையை அழைத்து கொண்டு சென்று பார்த்தாள்.
மகளின் தீவிரம் கண்டு வெங்கட்டும் வந்து பார்த்தார். அவருக்கும் பிடித்து போக .. நிகிதா பெயரில் வாங்க சட்டரீதியான வேலைகளை ஆரம்பித்தார். அதற்கு பிறகு தேங்காமல் எல்லா வேலைகளும் துரிதமாக நடந்தது.நிகிதாவும் தேங்கவில்லை. பேக்டரி வேலைகளையும் தேங்கவிடவில்லை.
அவளின் வேகம் கண்டு வீராவும் குடும்பத்தினரும் பயந்து போயினர். வயிற்றில் பிள்ளையை வைத்து கொண்டு இப்படி அலைகிறாளே.. குழந்தைக்கு ஏதாவது ஆகவிடுமா என..
நிகிதா ஒவ்வொரு தடவையும் வண்டியில் வெளியே சென்று வீடு திரும்பும் வரை விசாலா வாசலையே பார்த்து கொண்டு இருப்பார்.
“நிகிதா கண்ணு.. ஒரு ஐந்து மாதம் முடிஞ்ச பிறகு வண்டிய எடுக்கலாம்ல.. கொஞ்சம் கூட ஓய்வே இல்லாம அலைஞ்சு என்னாவது ஆயிடுச்சுனா.. வேணாங்கண்ணு வீரா வந்து கூட இது எல்லாம் பார்க்கட்டும்”என்றார். இதை நிகிதாவிடம் சொல்ல கூட அவருக்கு பயம் தான். அவளின் பிடிவாதம் தெரிந்தது தானே..
“அத்தை.. அது என் பிள்ள.. அது எனக்கு எந்த கஷ்டமும் கொடுக்காது. அது என்னைவிட ஸ்ட்ராங்..” என்றிட அதற்கு மேல் அவரும் தான் என்ன பேசுவார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் கைராசியான மருத்துவர் என்று பெயர் வாங்கிய பெண் மருத்துவர் ஒருவரை..ரோஹிணி விசாரித்து சொல்ல.. நிகிதாவை கூட்டி கொண்டு மங்களம் பாட்டி ரோஹிணி விசாலா பொன்னி பெண்கள் படையே சென்றது.
மூன்று மாதங்கள் முடிந்து நான்காம் மாதம் தொடக்கம்.. அதுவரை உள்ளூரில் ஆரம்ப சுகாதார மையத்தில் தான் பார்க்க கொண்டு இருந்தாள். அன்றே அவளுக்கு ஸ்கேன் செய்து குழந்தை நல்ல வளர்ச்சியுடன் இருப்பதாக சொல்லவும் தான் பெண்கள் மனதில் நிம்மதி..
தனது குழந்தையை திரையில் பார்க்க பார்க்க… அப்படி ஒரு ஆனந்தம்.. தன்னில் ஒரு உயிர்.. தன்னால் உருவாக்கப்பட்ட உயிர்.. தன்னையே உருவாக்கிய உயிர்… உலகமே போற்றும் தாய் என்ற ஸ்தானத்தை தனக்கு கொடுத்த உயிர்.. அதை திரையில் பார்த்தவளுக்கோ ஆனந்தத்தில் உதட்டில் உறைந்த சிரிப்போடு கண்களில் நீர் வடிய..
இந்த சந்தோஷம் தன் கணவனுக்கு வாய்க்கவில்லை என நினைத்து வருத்தம் கொண்டாள். உடனே ஒரு யோசனை..
“இதை எனக்கு வீடியோவாக பெண்டிரைவ்ல காப்பி பண்ணி தர முடியுமா” என மருத்துவரிடம் கேட்டாள்.
அவரும் சரி என்க.. தான் எப்போதும் வைத்திருக்கும் பெண்டிரைவ்வை கொடுத்து காப்பி பண்ணி வாங்கி கொண்டாள்.
அன்று இரவே வீராவுக்கு அதை வீடியோவாக வாட்சப்பில் அனுப்பினாள்.
அனுப்பி விட்டு ஆர்வத்தோடு போனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
ஒரு வெள்ளைடிக்…
இரண்டு வெள்ளை டிக்..
இரண்டு புளூ டிக்..
“சீக்கிரம் பாருங்க மாமா.. நம்ம பாப்பா க்யூட்டா இருக்குது..” என போனை பார்த்து கொண்டு அவன் அழைக்கும் நொடிக்காக பரபரப்பாக காத்து கொண்டு இருக்க…
போனை முதல் ரிங்கிலேயே எடுத்தவள்..
“மாமா..”
“அமுல்பேபி..” இருவரும் ஒரே நேரத்தில்..
“நம்ம பாப்பாடி..”
“ஆமாம் மாமா.. நம்ம பாப்பா..”
“இரு வீடியோ கால் வரேன்..”
இருவரின் முகத்திலும் உலகை வென்றிட்ட ஆனந்தம்.. பின்னே இருக்காதா.. தாங்கள் இருவரும் சேர்ந்து படைத்த உயிரின் உயிரோட்டம் கண்ட உவகை..
“அமுல் பேபி உன் வயிற்றை காமிடி..”
லேசாக புடவையை விலக்கி காண்பிக்க..
“நல்லா காமிடி..”
கூச்சத்துடன் மெதுவாக விலக்கி முழுவதும் காண்பிக்க.. அங்கே தெரிந்த பால் நிற வயிறை தொட்டு தடவி தன் சிசுவின் ஸ்பரிசம் உணர ஆசை.. ஆசை நிறைவேறாத தன் நிலையை எண்ணி கோபம் கொண்டு தன் கட்டிலின் சட்டத்தில் ஓங்கி தன் கையை அடிக்க..
“மாமா.. வேண்டாம்..”
“ச்சை.. நான் பாவிடி.” என்றான் கசங்கிய முகமாக..
அவனை மாற்றும் விதமாக “மாமா.. உங்க பேபி எப்படி மூவ் பண்ணுது பார்த்திங்களா.. ரொம்ப துறுதுறுனு இருக்குல்ல.. ஆனா மாமா ஒன்னு வேணா நிச்சயம்.. உங்க புள்ள பாஸ்ட் மூவ் தான்.. நீங்க கனடாவுக்கு தான ஓடி போனிங்க.. உங்க பேபி ஸ்பேஷ்கு ஓடிடும்”என சொல்லி கலகல என சிரிக்க..
“ஆனா ஒன்னுடி .. கேப் கிடைக்கும் போது எல்லாம் கிடா வெட்டறிடி..” என்றவன் முகம் மாறியிருக்க.. அதை ஆசையோடு பார்த்திருந்தாள்.
அவளின் பார்வை கண்டு “என்னடி மாமன சைட் அடிக்கறியா..”
“ஏன் நான் அடிக்க கூடாதா.. அந்த கல்யாணிக்கு தான் ரைட்ஸ் இருக்கா…”
“ஆஹா.. நிகிதா பேக் டூ பார்ம்.. இனி உன்கிட்ட பேசினா நல்லா வச்சு செய்வ.. சாப்பிட்டயா.. தூங்கு.. ” என போனை வைத்துவிட்டான்.
“கருத்த மச்சான்.. சும்மா கிலி தாங்கி இருக்கானே… நிகிதா இது கூட நல்லா தான் இருக்கு”
இரவில் வீராவிடம் தினமும் பேசிவிடுவாள். அதுவும் வீரா வீடியோ காலில்… அவள் முகம் பார்த்து பேசினால் தான் அவனுக்கு அன்றைய இரவு நிம்மதியான உறக்கம் வரும்.
அதுவும் அவள் அன்று செய்த வேலைகளை பேசும் போது அவள் கண்களில் தெரியும் ஆர்வம் அவளின் ஈடுபாட்டை சொல்லும்.. அவள் முதலில் வீராவுக்காக ஒரு தொழில் என தான் நினைத்து செய்தாள்.ஆனால் அதில் இறங்க இறங்க.. அவளுக்கே அதில் ஒரு பிடிப்பும் வேகமும் வந்துவிட்டது..
பணம் புகழ் மட்டும் தான் போதை தருமா.. தொழிலை நேசித்து அடுத்து என்ன என தேடுவதும் ஒரு போதை தான். அவளின் பேச்சு வீராவுக்கே ஒரு பயத்தை கொடுத்தது. சீக்கிரம் ஊர் திரும்பி விடும் வேகத்தை அதிகப்படுத்தியது.
தன் வேலையோடு அய்யாவுவின் பட்டறை வேலையையும் வேகமாக முடித்தாள். சிமெண்ட் அட்டை வேய்ந்த கட்டிடமாக இருந்ததை கான்க்ரீட் கட்டிடமாக கட்டி.. கட்டிடங்களை சுற்றி வேம்பு புங்கை பூவரசு மரங்கன்றுகளை வைத்து இருந்தாள். பார்க்கவே பசுமையாக இருந்தது.
கம்யூட்டரில் டிசைன் செய்த அட்டைகளை கொண்டு மோட்டார் உதவியுடன் முப்பது தறிகளை தயார் செய்தாள்.
பட்டறையில் வேலை செய்வோருக்குகுடிநீர் டாய்லெட் என அடிப்படை வசதி என அனைத்தும் செய்திருந்தாள்.
அதற்கு திறப்புவிழா வீரா வந்த பிறகு வைத்து கொள்ளலாம் என அய்யாவு சொல்ல.. வீரா தான் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என சொல்லி விட..
இதோ ஒரு நல்ல நாளில் அய்யாவும் விசாலாவும் மனையில் அமர்ந்திருக்க.. ஹோமம் வளர்த்து பூஜை செய்து.. சொக்கலிங்கம் மங்களம் தம்பதியராக ஆசிர்வாதம் செய்து முதல் தறியை இயக்கி வைத்தனர்.
நிகிதாவால் உருவாக்கப்பட்ட டிசைனில் எல்லா தறிகளையும் ஆட்கள் இயக்க.. சாப்ட் சில்க் புடவையில் ஐந்து மாதம் ஆன… லேசாக மேடிட்ட வயிற்றில் தனது இடதுகையை வைத்து மெதுவாக நடந்து ஒவ்வொரு தறியிலும் தான் வடிவமைத்த டிசைன்கள் புடவையாக நெய்யப்படுவதை பார்த்து ரசித்து பூரித்து போனாள்.
ஆரா இதை எல்லாம் லைவ்வாக வீடியோ காலில் வீராவிற்கு காண்பித்து கொண்டு இருந்தாள். தன் மனைவியின் முயற்சியிலும் உழைப்பிலும் மிளிர்ந்த தறிபட்டறையை ஆசையாக பார்த்து கொண்டு இருந்தான். தான் உருவாக்கியதை ரசித்து கொண்டு இருந்த மனைவியை பார்த்தவன் ஆராவிடம் நிகிதாவிடம் கொடுத்து பேச சொல்ல..
“அக்கா.. இந்தா மாமா..” கொடுத்து விட்டு ஓடிவிட்டாள்.
“சொல்லுங்க மாமா..”
“பங்ஷன் நல்லபடியா முடிஞ்சுதா..”
“ம்ம் இப்ப தான் முடிஞ்சுது.. தறி ஓடிட்டு இருக்கு மாமா..”
“பார்த்தேன்.. நான் சம்பாதிச்சுட்டு வந்து செய்யனும் நினைச்சதை நீ அங்கேயே இருந்து சாதிச்சட்டடி.. உன்னை நினைச்சா பெருமையா இருக்கு..”
“பார்ரா.. மாமா என்னை புகழ எல்லாம் செய்யறாரு..” என்று கிண்டல் செய்ய..
அவளை அப்படி ரசித்து பார்த்து கொண்டு இருந்தான். இள மஞ்சள் வண்ண சாப்ட் சில்க் புடவை.. கழுத்தில் ஒரு சின்ன ஆரம்.. தலைமுடியை சிறு பின்னலாக பின்னி.. இரண்டு புறமும் தோளில் உரசிக்கொண்டு இருந்த மல்லிகை சரத்தோடு.. நெற்றி வகிட்டில் குங்குமத்தோடு.. பூஜையில் கொடுத்த விபூதி சந்தனம் தீற்றலோடு இருந்தவளின் முகத்தை பார்த்தவன்.. பார்த்து கொண்டே இருக்க…
அப்படி ஒரு பார்வை.. அவன் காதலின் தேடலுக்கான பார்வை.. அவன் மட்டுமே பார்க்க கூடிய உரிமை பார்வை.. பார்க்க மட்டுமே முடியும் என்ற ஏக்கப் பார்வை..
அவனின் பார்வை லேசராக அவளை ஊடுருவி மின்சார அதிர்வை அவள் உடலில் ஏற்படுத்த… அதை தாங்க இயலாமல்..
“மாமா..”என முகத்தை அழகாக சுழித்து சிணுங்கினாள்.
அவள் சிணுங்கல் மொழியும்… வெட்கத்தில் சிவந்திருந்த முகமும்.. அவன் அவளை அணைத்து ஆலிங்கனம் செய்திட வீறு கொண்டான். அவளின் பின்கழுத்து வளைவிலும் காதுமடலின் பின்புறம் உள்ள பூனை முடிகளில் மீசை உரச குட்டி குட்டி முத்தம் இட்டு… அவனின் மில்கி சிலிர்த்து மயங்கி கிறங்கி சொக்கி நிற்கும் அழகை ரசித்து காதல் கொள்ள அருகில் இல்லாமல் போனோமோ என தவித்து போனான்.